அவனின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தவள், அவன் தன்னை கவனிக்கவில்லை என நினைத்து செமையா அழகாத்தான் இருக்கிறார்! அனால் கொஞ்சம் சிரிப்பும் கண்ணில் கொஞ்சம் சாந்தமும் இருந்தால் இவன் தான் உலக அழகன். ஒருவேளை மாலில் இவருடன் கோவித்துக்கொண்டு போன இவரோட அந்த அழகியோடு இருக்கும் போதாவது கொஞ்சம் சிரிப்பாரோ! எப்பா அந்த பொண்ணும் இவருக்கு ஏத்தமாதிரி என்ன ஒரு அழகு செம ஜோடி பொருத்தம் தான், சே என்னால் ரெண்டு பேருக்கும் பிரச்சனை வந்துடுச்சே! என்று அவனின் முகத்தை பார்த்தபடியே மனதிற்குள் பல கதைகள் பேசிக்கொண்டு வந்தாள் .
என்ன என் முகத்தை பார்த்து இவ்வளவு பெரிய இளிச்சவாயனாக இருக்கிறானே! என்று நினைகிறாயா? என்றான்.
ம்...கூம்...உங்களை போய் இளிச்சவாய் என்று குருடன் கூட சொல்லமாட்டான் சார்.... என்று அழகுநிலா சொல்லியதும் .பிறகு என்ன நெனச்சு என்ன பார்த்த சைட் அடிகிறையா? என்று தன ஒற்றை புருவத்தை மட்டும் தூக்கி கேட்டான்.
அவளும் அன்று ஹோட்டலில் பார்த்தபோதும் சரி, இன்று மாலில் பார்த்த போதும் சரி, அவன் பேசும் போது இடையிடையே அவன் ஒற்றை புருவத்தை அசால்டாக மேல் எழுப்பி கேள்விகேட்பதை வழக்கமாக கொண்டிருப்பதை பார்த்தால் அவ்வாறு அவன் செய்வது அவனுக்கு இன்னும் கம்பீரத்தை கொடுப்பததையும் உணர்ந்தாள்.
இவருக்கு, பார்பதற்கு சைட் அடிக்க ஏத்தமாதிரி அழகா இருக்கோமென்ற கெத்து இருக்கு. அன்னைக்கு என்ன பார்த்து கன்றி புரூட் என்று சொன்னவனை நான் சைட் அடிப்பதாக ஒத்துக்கொள்வதா? என்ற ஈகோ மனதில் எட்டி பார்க்க.... பட் என்று
உங்களுக்கு... பார்க்கிற பொண்ணுங்க எல்லாம் சைட் அடிகிறாங்கனு நெனப்புத்தான் சார். நான் ஒன்றும் உங்களை சைட் எல்லாம் அடிக்கவே இல்லைப்பா, நானும் என்னிடம் இந்த போனை அந்த அயோக்கியன் கேட்டதில் இருந்து எப்படியாவது என் வீடியோ பதிவை இதில் இருந்து டெலிட் செய்துவிடனும் என்று டிரை பண்றேன் ஆனால் அது ஓபன் பண்ண பிங்கர் பிரின்ட் கேட்குது. வேறு வழியில் நான் முயன்றும் ஓபன் பன்னமுடியலையே! அன்னைக்கு எப்படி நீங்க இதன் ரெகார்டை என்னிடம் ஓடவிட்டு காண்பிச்சீங்கனு கேட்கலாமா என்று பார்த்தேன் என்றாள்.
ஆதித் உயர்ந்த இடத்திற்கு வந்தபின் அவனிடம் இயல்பாக பேசும் பெண்கள் குறைந்த எண்ணிக்கையே. .கண்களில் தூண்டிலோடும் பேச்சில் குழைவோடும் இருப்பவர்களையே அதிகம் சந்தித்ததனாலோ என்னவோ! வர்சாவைத் தவிர மற்ற பெண்களை ஓர் கடுமையான பார்வையால் எட்ட நிற்கவே வைத்தான் ஆதித்.
அழ்குநிலாவின் இயல்பான பேச்சு ஏதோ ஒருவகையில் ஆதித்தை ஈர்த்தது. அவள் நான் உங்களை சைட் எல்லாம் அடிக்கவே இல்லப்பா! என்று போட்ட அழுத்தமான வார்த்தைகளிலேயே அவள் பொய் சொல்வதை உணர்ந்த ஆதித்துக்கு உதட்டில் இளமுறுவல் அரும்பியது. அதன் பின் அவள் கூறியதை கேட்டவன் நீ உண்மையிலேயே சாப்ட்வேர் இஞ்சினியர்தானா..? என்று கேட்டான்.
அவன் அவ்வாறு கேட்டதும் ஹலோ சார்... நானெல்லாம் காம்பஸ் இண்டர்வியூவிலே சாப்ட்வேர் ஜாப்பிற்கு செலக்ட் ஆனவளாக்கும். என்னை பார்த்து எப்படி நீங்கஎப்படி டவுட்டா கேட்கலாம்? என்று முறைப்புடன் கேட்டாள்.
அவள் பேசும் தோரணை ஆதித்துகு சுவாரஸ்யத்தையும் மேலும் பேச்சை வளர்க்கும் ஆர்வத்தையும் கொடுத்தது. எனவே அவளிடம், உங்க பீல்ட்டில அவங்க ஹெட்டயோ கூட வேலை பார்கிறவங்களை எவ்வளவு வசயசானவங்கலாக இருந்தாலும் பேர்சொல்லி அதன் முன் ‘மிஸ்டர்’ போட்டுத்தான் கூப்பிடுவாங்க. ஆனால் நீ என்னை மூச்சுக்கு முந்நுறுதடவை சார் போட்டுக் கூப்பிடுற என்றதும், அதற்கு பதில் பேச முயன்றவளை ஸ்....என்று சத்தம் கொடுத்து வாயில் ஓர் விரலை வைத்து நான் இன்னும் சொல்லி முடிக்கவில்லை. பேசிமுடிக்கும் முன் இடையில் புகுந்து பேசுவது எனக்கு பிடிக்காது என்று சொல்லியவன், அப்பறம் அன்னைக்கு ஹோட்டலில் ஏற்கனவே ஆன் பண்ணி போன் ரெக்கார்டு மோடில் ஓடிக்கொண்டு இருந்ததால் அதில் வீடியோ ரெகார்டை உனக்கு காண்பிக்க முடிந்தது இதுகூட தெரியாம நீ எல்லாம் சாப்ட்வேர் இஞ்சினியர்னு சொன்னால் எப்படி ஒத்துக்கொள்ள முடியும்? என்றான்.
ஹி..ஹி.. என்று ஓர் அசட்டுச் சிரிப்பை அவனுக்கு முன் உதிர்த்தவள், ஆமால்ல அது ரெகார்ட் மோர்டில் இருந்ததுள்ள நான் அதை யோசிக்கவே இல்லையே என்றாள். இவனிடம் பார்க்கும் போதெல்லாம் பலப் வாங்கிக்கிட்டே இருக்கோமே என்று மானசீகமாக் தலையில் கைவைத்துக்கொண்டவள் பின் கடுப்புடன் அவன் வாயில் விரலை வைத்து ஸ்....இடையில் பேசாதே என்று அதிகாரதோரணையில் பேசும் போதே, எப்பா! பயங்கர ஸ்டிக்ட் ஆசாமியா இருப்பான் போல, இவன்கிட்ட வேலை பார்கிறவங்க செத்தாங்க.
நம்க்கு ஹெல்ப் செய்தவர்னு பார்த்த ரொம்பத்தான் அதிகாரம் தூள்பறக்கு என்று மனதில் அவனை அர்சனை செய்தபடியே வெளியில் வெகுளியாக முகத்தை வைத்துக்கொண்டு, இல்ல நானும் அன்னைக்கும் பார்கிறேன் இன்னைக்கும் பார்கிறேன் அதென்ன என்னைய நீ,வா,போ என்றே மரியாதையில்லாமல் கூப்பிட்டுப் பேசுறீங்களே! நாம் ரொம்ப மதிச்சு சார் போட்டுக் கூப்பிட்டாலாவது கொஞ்சம் திருந்திருவாங்கனு கூப்பிட்டுத்தான் பார்கிறேன் ஆனால் எங்கே திருந்தரமாதிரி தெரியலயே! என்றாள்.