போதும் என்று தோன்றும்.
காலை வந்தால் என்ன
வெயில் எட்டிப் பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம்
அதை நம்ப மாட்டேன் நானும்.
பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்
தீயாய் மாறும் தேகம், தேகம்.
உன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம்
வாழ்வின் எல்லை தேடும் தேடும்.
ஒரு வீட்டில் நாம் இருந்து
ஓர் இலையில் நம் விருந்து
இரு தூக்கம் ஒரு கனவில்
மூழ்கி வாழ்க்கை தொடங்கும்
நீ சமையல் செய்துடுவாய்
நான் வந்து அணைத்திடுவேன்
என் பசியும் உன் பசியும்
சேர்ந்து ஒன்றாய் அடங்கும்.
நான் கேட்டு ஆசை பட்ட பாடல் நூறு
நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்.....
தாலாட்டை கண்ணில் சொன்ன பெண்ணும் நீ தான்.
காலம் நேரம் தாண்டி வாழ்வோம்.
பால் சிந்தும் பௌர்ணமியில்
நாம் நனைவோம் பனி இரவில்
நம் மூச்சின் காய்ச்சலில்
மீண்டு பனியும் நடுங்கும்......
வீடெங்கும் உன் பொருட்கள்
அசைந்தாடும் உன் உடைகள்
தனியாக நானில்லைஎன்றே சொல்லி சிணுங்கும்....
தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே
தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சே நாட்கள் ஆச்சே
உன் வாசம் என்னில் கொட்டும் ஆடி போனேன்
வாச பூ தான் நானும் ஆனேன்....
இந்தர் பாடி முடித்த பொழுது பூஜா முழுவதும் அவன் வசமாகி இருந்தாள். அவளை ஒரு கையில் அணைத்தவறே, மறு கையில் அங்கிருந்த ரிமொர்டை, எடுத்து அதிலிருந்த பொத்தானை அமுக்கிய பொழுது, அங்கிருந்த கண்ணாடி ஜன்னல்களில் திரை விரிந்து, வெட்கமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த சந்திரனிடம் இருந்து மறைத்தது.
இம்முறை நாமும் அங்கே அவர்களோடு இல்லாமல் சிறிது ஒதுங்கிக் கொள்வோம்.
{kunena_discuss:1103}