(Reading time: 22 - 44 minutes)

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் சிவா..மணி அண்ணா தான் இருக்காரே..நீங்க ஷரவ் ஷரவந்திகிட்டேயும் சொல்லுங்க..நா அவங்ககிட்ட அப்பற பேசுறேன்..எனக்கு ஒரு விஷயம்தான் உறுத்திட்டே இருக்கு..போஸ்மார்ட்டம் பண்ணா அவன் பாய்ஸன் கன்ஸ்யூம் பண்ணிருக்கான்னு தெரிஞ்சுடும் அது அக்ஸிடெண்டா நடந்ததுதான் இருந்தாலும் கொலைக்கு சமம்தான சிவா..

கார்த்திக் ப்ளீஸ் அப்படி ஏன் யோசிக்குறீங்க நீங்க காப்பாத்த தான நினைச்சீங்க அங்கிருந்த போலீஸூம் நடந்தயெல்லாம் பாத்துட்டு தான இருந்தாங்க..அப்பறம் எப்படி இது கொலையாகும்..ஆல்ரெடி நா இன்ஸ்பெக்டர்ட்ட பேசிட்டேன்..அவரு ஏற்கனவே அவன்மேல செம கடுப்புல தான் இருந்தாரு..இதுல பொண்ணு மேல வேற கைய வச்சுருக்கான் எப்படியிருந்தாலும் அவரு நமக்குதான் சப்போர்ட் பண்ணுவாரு..நீங்க கவலபடாம இருங்க ..சஹானாவ பாத்துக்கோங்க கார்த்திக்..கொஞ்சநாள் ரிலாக்ஸ்டா இருந்துட்டு வாங்க..டேக் கேர்..பை..

மாலைமங்கும் வேளையில் வீட்டின் மொட்டைமாடியில் நின்று எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்..சஹானா அவனருகில் வந்து தோள்தொட நடப்புலகிற்கு வந்தவன் ஆதரவாய் அவள் தோள்பற்றி நின்றான்..

கொஞ்சாமாவது தூங்கினியா சஹி??ரொம்ப டயர்டா தெரியுரியேடா?

இல்ல மாமா அதெல்லாம் ஒண்ணுமில்ல நல்லாதான் இருக்கேன் நீ தான் எதையோ மனசுல போட்டு குழப்பிக்குறமாறி இருக்கு..நார்மலா இல்லையே நீ..

உண்மைதான் சஹிம்மா எவ்ளோ தடுத்தாலும் மனசு அதைப்பத்தியேதான் யோசிக்குது..உன்மேல அவன் கைவச்சப்போ என் பொறுமையெல்லாம் எங்க போச்சுன்னே தெரில..அவன ஏன் அப்படி அடிச்சேன்னும் தெரில..அப்போ நா கொஞ்சம் நிதானமா இருந்திருந்தா இவ்ளோ நடந்துருக்காது..

மாமா அவன நீ அடிச்சதாவா நினைச்சுட்டு இருக்க??அவ்ளோ கோபம் உனக்கு வரவே வராது எந்த சூழ்நிலைலயும் ஆனா கார்த்திகேயனுக்கு வரும்..

சஹி!!!

ஆமா மாமா உன் முகத்துல இருந்த கோபம் வெறி அதெல்லாம் நீயில்லநு உறுதியா காட்டுச்சு..உயிர் போறப்போ அவன் சொன்னத மறந்துட்டியா உன்ன அவன் என்னனு கூப்டான்னு யோசிச்சு பாரு…..நிச்சயமா அவன் கீழ விழுந்தத பாக்குற வர நீ நீயா இல்ல மாமா..எனக்கு நல்லாவே வித்யாசம் தெரிஞ்சுது.. அதனால நீ எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம இரு..

சஹிம்மா ரொம்ப ஆச்சரியமா இருக்குடா கனவுல கூட நினைச்சு பாக்க முடியாத விஷயம் இது..என்னவோ யாருக்கும் எந்தா பிரச்சனையும் இல்லாம எல்லாம் முடிஞ்சுதே அதுவரை நிம்மதியா இருக்கு..காயத்ரிய வர சொல்லி சின்னதா செக்அப் பண்ணிக்கலாம்டா..டூ டேஸ்ல இங்க போலீஸ் வெரிபிகேஷன்லா முடிஞ்சுரும் அதுக்கப்பறம் நாம ஊருக்கு கிளம்பலாம்..வேற எங்கேயாவதுகூட போலாம் ஆனா கொஞ்ச நாளுக்கு இங்க வேணாம்டா..சாரி தப்பா எடுத்துக்காத..

மாமா இதுல தப்பா எடுத்துக்க ஒண்ணுமில்ல..நா தான் சொன்னேனே எனக்கே எல்லாரையும் பாக்கனும் போல இருக்கு எப்போ வேணா கிளம்பிடலாம் நீ மனச போட்டுகுழப்பிக்காம வா வந்து எதாவது சாப்டு என தன்னவனை பரிவாய் கீழே அழைத்துச் சென்றாள்..

மக்களே சொதப்பாம ஒரு முடிவு வந்துதாநு சொல்லுங்க..ககருத்துக்கள் கண்டிப்பாக வரவேற்கப்படுகின்றன.. :) smile

தொடரும்

Ninnai saranadainthen - 21

Ninnai saranadainthen - 23

{kunena_discuss:1097}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.