(Reading time: 22 - 44 minutes)

சற்றே நிம்மதியடைந்தவன் தங்கள் பெயர் வெளிவராமல் பார்த்துக் கொள்ளுமாறு அவரிடம் கேட்டுக் கொள்ள அவரும் சம்மதித்தார்..அவனருகில் சென்றவனுக்கு அவன் காயங்களை பார்த்து தன்னால் தான் இப்படி நடந்தது என்பதை எண்ணி குற்ற உணர்ச்சி எழ அவன் கன்னம்தட்டி எழுப்ப முயற்சி செய்தான்..அரைகுறை மயக்கத்தில் நாக்கு வறண்டு போயிருக்க தண்ணீ தண்ணீ என அரற்றினான்..என்ன செய்வதென தெரியாமல் அக்கம் பக்கம் பார்க்க அருகில் ஒரு சிறு தேங்காய்மூடி இருந்தது அவசரமாய் எழுந்து அதை நீரில் கழுவி பம்ப்செட்டிலிருந்து நீர் எடுத்து அவனை குடிக்க வைத்தான்..அவன் தேவைக்கேற்ப மேலும் இருமுறை கொடுக்க குடித்து முடித்தவனுக்கு உடம்பிற்குள் ஏதோ செய்ய தன் மார்பை அழுந்தபிடித்து நெளியே மறு கையால் கார்த்திக்கின் சட்டையை பிடித்திருந்தான்..அனைவருக்குமே என்ன நடக்கிறது என புரியாமல் நிற்க அருண் கார்த்திக்கிடம்,இந்த ஜென்மத்துல நீ ஜெயிச்சுட்ட கார்த்திகேயா ம்கும் தேவி ஜெயிச்சுட்டா..என்றவனின் கை வழுவிழந்து கீழேயிறங்க கார்த்திக் ஒரு நொடி உயிர் உறைய அவனையே பார்த்திருந்தான்..சட்டென ஏதோ தோன்ற சஹானாவை பார்க்க அவள் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம் சந்தோஷம்..அதற்குள் இன்ஸ்பெக்டர் வந்து மூக்கின் அருகே கைவைத்து பார்த்து கார்த்திக்கிடம் இடவலமாய் தலையசைத்தார்..நீங்க கிளம்புங்க மிஸ்டர் கார்த்திக்..இதுக்கு மேல நீங்க இங்க இருக்குறது சரி வராது..லாயர் சிவா ஆல்ரெடி என்கிட்ட பேசினாரு சோ எதாவது பார்மாலிட்டி இருந்தா நா சொல்லி அனுப்புறேன்..தலைல ஆள்காயமா இருக்கும்நு நினைக்குறேன்..பிளட் லாஸ் வேற சோ யு டோண்ட் வொரி..மணி நீங்க கூட்டிட்டு போங்க என்றுகூற ஒன்றும் புரியாமல் எழுந்தவனின் கண்கள் ஒரு இடத்தில் குத்தி நின்றது..பம்ப் செட் நீரின் மேல் மிதந்த பூச்சிமருந்து பெயர்தாங்கிய பிளாஸ்டிக் பாட்டில்..கார்த்திக்கை கவனித்த மணியும் அதைப்பார்க்க அதிர்ந்துதான் போனார் இருந்தும் முகத்தில் எதையும் காட்டாமல் சஹானாவையும் அவனையும் அழைத்துக் கொண்டு விறுவிறுவென வீட்டிற்கு வந்துவிட்டார்..

கார்த்திக் இன்னமும் அதிர்ச்சியிலேயே இருக்க மணி குடிக்க தண்ணீர் கொடுத்து அவனை சமாதானப்படுத்தினார்..தம்பி..

அண்ணா நீங்களும் அதைப் பாத்தீங்க தான???

நாம எதையும் பாக்கல நீங்க எதையும் பண்ணல அவ்ளோதான் மறந்துடுங்க தம்பி..சொன்னா கேளுங்க அருண்ங்கிற ஒருத்தன உங்க வாழ்க்கைல இருந்தே தூக்கிப் போட்ருங்க அதுதான் எல்லாருக்கும் நல்லது..

அவர் அவர்போக்கில் பேசிக் கொண்டிருக்க கார்த்திக் இன்னமும் அமைதியாய் அமர்ந்திருந்தான்..சஹானா மெதுவாய் அவனருகில் வந்து அவன் காலருகில் அமர்ந்தாள்..

மாமா..

அவளை பார்த்தவன் அடுத்த நொடி அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டான்..தேவி!!!!!

மாமா என் பார்வையையே இவ்ளோ புரிஞ்சு வச்சுருக்கியே அப்பறம் ஏன் மாமா நா செஞ்சத புரிஞ்சுக்க மாட்ற..அந்த அருணோட முடிவு இதுவாதான் இருக்கனும்..போலீஸ் கோர்ட் இதெல்லாம் ம்கும் அந்த தண்டனையெல்லாம் அவன் எப்பவோ தாண்டிடான்..அதனாலதான் நானே அவனை தேடி போனேன்..அவனுக்கு போன் பண்ணி நாதான் எல்லாத்துக்கும் காரணம்னு சொன்னேன்..நா உன்னைப் பாத்து பேசனும்னு சொன்னேன்..உங்க ரெண்டு பேரையும் இங்கிருந்து போக வச்சேன்..அவன் என்ன பண்ணா உனக்கு கோவம் வருமோ அத செய்ய வச்சேன்..எனக்குத் தெரியும் நீ அவன்மேல பரிதாப படுவநு ஆனா அந்த மருந்து தண்ணில விழுந்தது அந்த தண்ணிய அவனுக்கு குடுத்தது எல்லாமே எனக்காக அந்த சிவன் பண்ணிணது..இதுலயே தெரிலயா அந்த கடவுளும் நம்ம பக்கம் இருக்காருநு..நீ எதையும் போட்டு குழப்பிக்காத இனி உன் சஹானா மட்டும்தான் நா வரமாட்டேன்..என் ஆசையை அந்த ஈசன் நிறைவேத்திட்டான்..இனி எனக்கு வேலையில்ல சஹானாவா என்னோட நூறு வருஷம் நீ சந்தோஷமா வாழணும்..அது கண்டிப்பா நடக்கும்..நல்லாயிருக்கனும் மாமா நீ..என்றவள் எழுந்து அவன் நெற்றியில் அழுத்தமாய் இதழ்பதித்து நகர்ந்தாள்.

சோபாவின் அருகில் நின்றவள் ஆப்படியே மயங்கிச் சரிய கார்த்திக் அவசாரமாய் அவளை பற்றி மடியில் கிடத்தினான்..அடுத்த சில நிமிடங்களில் கண்விழித்தவள், கார்த்திக்..

சஹிம்மா ஆர் யூ ஓ.கே??

எதுவும் வேணுமாடா??

மாமா தேவிகா போய்ட்டாளா?இனி வரமாட்டாளா??இப்போ அவளுக்கு சந்தோஷமா??

சஹி எல்லாம் முடிஞ்சுதுடா..தேவிகா சந்தோஷமா கிளம்பிட்டாஇனி அவ உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டாயு ஆர் பர்வெக்ட்லி பேக் டு யுவர் லைப் சஹி..ரிலாக்ஸ்..போ நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு என அவளைஅறைக்குள் அழைத்துச் சென்று படுக்க வைத்துவிட்டு வர சிவா அவனை அழைத்தான்..

கார்த்திக் என்னாச்சு ரொம்ப நேரமா கால் பண்றேன் எடுக்கவேயில்ல..மணி அண்ணா எல்லாத்தையும் சொன்னாரு..இன்ஸ்பெக்டர்ட்ட பேசிட்டேன்..ஒண்ணும் ப்ரச்சனையில்லையே??

சிவா ஒண்ணும் பிரச்சனையில்ல..நா வீட்லதான் இருக்கேன்..நாங்க சேஃவ் தான்..அந்த அருண் இறந்துட்டான்..என நடந்ததை கூற,

கார்த்திக் சத்தியமா புல்லரிக்குது எனக்கு..மை காட் நம்பவா வேண்டாமாநு கூட தெரில..பட் எனிவே எல்லா ப்ராப்ளம்ஸும் முடிஞ்சுது அதுவர சந்தோஷம்..நா அங்க வரவா கார்த்திக்??ஹெல்ப் எதுவும் தேவப்படுதா??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.