அவன் கூறியதை கேட்டதும் கோபத்தின் உச்சிக்கு போன நரேன் கொஞ்சம் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு, நாளைக்கு நைட்டு கெஸ்ட்ஹவுஸ் வா! உனக்கு வேண்டியதை தர்றேன் வாங்கிக்கோ! என்று சொன்னவன் போனை அனைத்து வைத்தான். நாளைக்கு இருக்குடீ உனக்கு என்று கருவிக்கொண்டான்.
அழகுநிலா அன்று காலை அவளது ஆபீஸ் கேப் வருவதற்கு முன்பே சாயங்காலம் நடக்கும் சுமதியின் நிச்சயத்திற்கு செல்வதால் எப்பொழுதும் போடும் சுடிதாரை தவிர்த்து சேலை அணிந்து கொண்டாள்.
மேலும் அங்கு போகும் முன் ரமேசுடன் சைபர் கிரைம் ஆபீஸ்ககு சென்று கொடுப்பதற்காக நரேனின் போனையும் எடுத்துக்கொண்டாள். மேலும் இன்று ஆபீஸ் வேலையை ஒழுங்காகச் செய்தால் தான் சாயங்காலம் சுமதியின் நிச்சயத்திற்கு பெர்மிசன் கேட்டு ரமேசுடன் கிளம்பி போகமுடியும் என எண்ணி வசந்த் சொன்னதுபோல் முன்னமே ஆபீஸ் போவதற்கு கிளம்பி வெளியில் வந்து ஆட்டோவில் ஏறி தனது ஆபீஸ் அடைந்தாள்.
நரேனின் ஆள் ஒருவன் அழகுநிலாவை கண்காணிப்பதற்கு வாசலில் நின்று கொண்டிருந்தவன் அவள் ஆபீஸ் பஸ் வர இன்னும் நேரம் இருப்பதால் கொஞ்சம் அசால்டா இருந்தான் அழகுநிலா வெளியில் வந்ததையோ கைநீட்டி ஆட்டோவை அழைத்ததையோ கவனிக்க தவறினான் சரியாக ஆட்டோ கிளம்பி போகும் போதுதான் தற்செயலாக பார்த்தவன் ஆட்டோவில் அவள் செல்வதைப் பார்த்தான்.
உடனே நரேனுக்கு அழைத்து அவள் நாம் எதிர்பார்த்த நேரத்தைவிட முக்கால்மணி நேரத்திற்கு முன்பே ஹாஸ்டலைவிட்டு கிளம்பிவிட்டதால கோட்டவிட்டுட்டோம் அண்ணே என்றும் கூறினான் .
அவன் சொன்னதை கேட்டு டெண்சனான நரேன், சொன்ன வேலையே செய்ய துப்பில்லை? நீ எல்லாம் என்ன xxxxxxxx என்று அசிங்கமாக அவனை திட்டியவன் சரி சாயங்காலம் அவ ஆபீஸ் விட்டதும் அந்த ரமேஷ் கூட வெப்பேரிக்கு கமிஷனர் ஆபீசுக்கு போறவழியில் போட்டுருங்க அப்போவும் சொதப்புன நீ செத்த என்று கூறி தொடர்பைத் துண்டித்தான்.
வசந்துக்கு போன் செய்த மாதேஷ், நான் ஆபீசுக்கு மதியம்தான் வருவேன் அதுவரை அழகுநிலாவிற்கு அதிக வேலை கொடுத்து டார்ச்சர் செய்யச் சொன்னான் .
அவன் கூறியதை கேட்ட வசந்த் டேய் ஏண்டா அழகான ஒருத்திகிட்ட என்ன வில்லனா காட்டச்சொல்ற. சும்மாவே அவ பாஸ் ஆச்சேனு கொஞ்சமாவது ஏறெடுத்து பாப்போம் என்று நினைக்காமல் என்னை, கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல் பார்த்து வைப்பா. இதில் நீ...வே..ற. என்று ஆதங்கப்பட்டான்
அவன் சொல்லவும் நீ வில்லனாக ஆனாத்த்தானே நான் ஹீரோ வேஷம் அவளிடம் காண்பிக்க முடியும்! சொன்னத செய் வசந்த்.. என்றபடி இணைப்பை துண்டித்தான்.
ஏற்கனவே நியூ பில்டிங் காண்ட்ராக்ட்டை ஜானகி பில்டர்ஸ்கிட்ட கொடுப்பதற்கு மாதேசை சம்மதிக்க வைப்பதற்கே நேற்று வசந்துக்கு அப்பாடா.. என்று ஆனது அதில் ஏற்கனவே தன மீது கொஞ்சம் கடுப்பாக இருப்பவனிடத்தில் இப்போ நான் அழகுநிலாவிற்கு ஆதரவாக இருப்பதுபோல் பேசினால் அவ்வளவுதான், உன் பார்ட்னர்சிப்பே வேண்டாம் என்று போய்விடுவான். என் எதிர்கால கனவுகளுக்கு அவனின் சப்போர்ட் நமக்கு இப்போ தேவை, சோ... அழ்குநிலா எப்படிபோனால் நமக்கென்ன. அவன் சொன்னது போலவே செய்துடுவோம் என முடிவிற்கு வந்தான் வசந்த்.
அழகுநிலா ஆபீஸ் வந்ததில் இருந்து அவளுக்கு மூச்சுவிடக்கூட நேரம் இல்லாமல் அடுத்தடுத்து வேலை வந்துகொண்டே இருந்தது மதியம் லஞ்சுக்கு எல்லோரும் சாப்பிட போனபின்பும் அவள் தன் வேலையில் மூழ்கியிருந்தாள்
ரமேஷ் லஞ்ச் டயத்தில் அழகுநிலாவை பார்த்து கம்ப்ளைன்ட் எவ்வாறு எழுதிக்கொடுக்க போகிறாள் என்று தெரிந்து கொள்ளவும் ஈவினிங் போர்தேர்ட்டிக்கு பெர்மிசன்கேட்டு வரச்சொல்வோம் என நினைத்தும் அழகுநிலாவின் வருகைக்காக காத்து இருந்தான் .
ஆனால் அவள் வராத காரணத்தால் ஆபீஸ் ரூமின் பக்கம் வந்து லஞ்ச் சாப்பிட வராமல் இன்னும் என்ன செய்துகொண்டிருகிறாள் என பார்க்க வந்தான் ரமேஷ்.
எம் டி ரூமில் அவளுக்கு போட்டிருந்த மேஜையின் உள்ள சிஸ்டம் முன் உட்கார்ந்து சின்சியராக அவள் வேலை பார்த்துக்கொண்டிருப்பதை கண்ணாடி தடுப்புக்கு வெளியில் நின்று கவனித்தான் ரமேஷ். அங்கு அவள் மட்டும் உட்காந்து வேலை பார்ப்பதை பார்த்தவன் அவளது மொபைலுக்கு அழைத்தான்.
வேலை செய்துகொண்டே மொபைலை எடுத்து காதுக்கு கொடுத்த அழகுநிலா சொல்லுங்க ரமேஸ் என்றதும் என்ன அழகுநிலா சாப்பாட்டு நேரத்தில் கூட வேலை செய்துகிட்டு இருக்கீங்க? வாங்க முதலில் சாப்பிட்டுவிட்டு பிறகு வேலை செய்யலாம் என்றான். .
அப்பொழுதுதான் நேரத்தை பார்த்த அழகுநிலா டைம் பார்க்கல ரமேஷ் ஒரு டூ செகண்ட்ல இத முடிச்சுட்டு நான் வருகிறேன் என்றவள் சொன்னதுபோல் அவனின் முன் வந்து தன சாப்பாட்டுடன் உட்கார்ந்தாள் அழகுநிலா.
வந்துட்டயா! அழகுநிலா, சாயங்காலம் ஆபீஸ் முடிவதற்கு ஒருமணிநேரம் முன்பே சுமதி நிச்சயத்திற்கு போகவென்று பெர்மிசன் வாங்கிட்டு வந்துவிடுகிறேன் நீயும் வந்துடுவாயா?, அந்த மொபைலை எடுத்து வந்துள்ளாயா என்று கேட்டான் ரமேஷ்.