“ம்ம்ம்...”
“அப்போ அங்கே கார்ல உன் தலையில இருந்து இந்த இரண்டு இதழ் மட்டும் விழுந்திருந்தது... எடுத்து பத்திரமா, பொக்கிஷமா பூட்டி வச்சிருக்கேன்”
நந்திதா வார்த்தை ஒன்றும் வராமல் நின்றிருந்தாள்.
அவள் கன்னத்தில் செல்லமாக தட்டிய உதய்,
“எனக்கு டைம் ஆகுது நதி, வா சாப்பிடலாம். உனக்கும் சேர்த்து சான்ட்விச் எடுத்துட்டு வந்தேன்” என்றான்
“நீங்க சாப்பிடலையா?”
“நான் எப்போ உன்னை விட்டுட்டு சாப்பிட்டுருக்கேன்?”
ஏற்கனவே நெகிழ்ந்திருந்த நந்திதாவின் கண்களில் நீர்த் துளிகள் எட்டிப் பார்த்தது.
இந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கும் கணவன் கிடைக்க அவள் எத்தனை அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.
“ஹேய் நதி, ஏன் இப்படி எமோஷனல் ஆகுற? கண்ணெல்லாம் கலங்குது?”
நந்திதா எதுவும
...
This story is now available on Chillzee KiMo.
...
கேள்விப் பட்டேன்....”
சொல்லிவிட்டு கூர்மையாக மனைவியின் ரியாக்ஷனை கவனித்தான்.
அவள் ‘இப்போது எதற்கு சந்தோஷின் பேச்சு’ என கோபப்படவில்லை....
என்னிடம் ஏன் இதை சொல்கிறாய் என்று கோபமாக பார்த்து முறைக்கவில்லை....
அவன் என்ன ஆனால் எனக்கு என்ன வந்தது என்று சொல்லவில்லை...