மாறாக, அவனுக்கு அவளின் முகம் தெரியாவாறு முகத்தை திருப்பி வெளியே வேடிக்கை பார்த்தவாறு,
“ம்ம்ம்...” என்று ‘ம்’ மட்டும் கொட்டினாள்.
உதய் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை... அமைதியாக சாப்பிட்டு முடித்து விட்டு கிளம்பும் வேலையை பார்த்தான்.
டையை எடுத்து கட்டும் போது எப்போதும் போல நந்திதா உதவவும், அவளை நேராக் பார்த்து,
“உனக்கு ஒன்னுமில்லையே நதி??? ரொம்ப டல்லா தெரியுற...” எனக் கேட்டான்...
“ப்ச்... ஒன்னுமில்லை உதய்... நான் தான் சொன்னேனே... ரெஸ்ட் எடுத்தா சரியா போகும்...” என்றாள் நந்திதா...
மேலே எதுவும் கேட்காமல் இருந்த உதய், அவள் அவனின் கோட்டை எடுத்து மாட்டி விடவும், தன்னுடைய ஆபிஸ் பேகை திறந்து ஒரு செக் புக்கையும், பாங்க டெபிட் கார்டையும் எடுத்து நந்திதாவிடம் கொடுத்தான்.
அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ு பக்கத்துல இருக்க காபி ஷாப்புல இருப்பேன்....” என்றான்.
“தாங்க்ஸ் ஜெய்... நான் அங்கே வந்து சொல்றேன்....”
“ஓகே பாஸ்...”
போனை கீழே வைத்த போது நந்திதாவின் கை அவளையும் மீறி நடுங்கியது....
இருந்தாலும் சமாளித்துக் கொண்டு உடனேயே ஜெய் சொன்ன காபி ஷாப்பிற்கு கிளம்பினாள்.