(Reading time: 17 - 33 minutes)

“அப்படின்னா என் முடிவையும் கேளு, நானா?இன்னொருத்தரானு அன்பை பங்கு போடுற இட்த்துலநான் எப்பவுமே இருக்க மாட்டேன்.. நான் போறேன்!”என்றான் புகழ்.

அழுகை, கோபம்,நிராசை அனைத்துமே யாழினியை சூழ்ந்துகொண்டது. அறையில் இருந்த திருமண பத்திரிக்கையை அவன் முகத்தில் தூக்கி எறிந்தாள்.

“அப்போ எதுக்குடா இந்த ஏற்பாட்டை எல்லாம் விழுந்து விழுந்து செஞ்ச? எதுக்கு என்னை உயிரோட கொன்ன?ச்ச.. ஐ ஹேட் யூ!” என்றுவிட்டு தங்கள் இருவரின் அறையையும் இணைக்கும் அந்த கதவினை திறந்துகொண்டு தன் அறைக்குள் புகுந்துகொண்டாள் யாழினி.

“போக மாட்டான்.. நானே போடானு சொன்னாலும் போக மாட்டான்.. சும்ம நடிச்சேன்டீ லூசுனு இப்போ சொல்லுவான்!” தன்னையே சமாதனப்படுத்திகொண்டு கட்டிலில் அமர்ந்துகொண்டாள் யாழினி. அவளின் பார்வை புகழின் மீதே இருக்க, புகழோ தனது பர்ஸ், பைக் சாவி இன்னும் சில முக்கிய பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டான். யாழினி கவனிக்க தவறிய அந்த சில நொடிகளில் அவளின் வதனத்தை கண்களில் நிரப்பிக் கொண்டு,அவளிடம் சொல்லிக் கொள்ளாமலேயே அங்கிருந்துகிளம்பினான்.

பூமியே சுழல்வது போல உணர்ந்து ஸ்தம்பித்து போனாள் யாழினி. அதற்கு நடந்ததை தமிழ் அறிவான்! இருவருமே நிகழ்காலத்திற்கு வந்தனர். அன்றுநடந்த அனைத்தையும் தமிழிடம் சொல்லி தேம்பினாள். புகழின் வார்த்தைகளை கேட்டு தமிழ் அவனை தூற்றிவிட கூடாது என்பதற்காகவே இத்தனை நாட்களாக யாழினி அனைத்தையும் மறைத்தாளென்பதை புரிந்து கொண்டான் தமிழ்.

“ஏன்டா என் லைஃப்ல வந்த நீ?

சரியான இம்சை..

எனக்கு தமிழ்தான் வேணும்நீ வேண்டாம் போ!” யாழினியைப் போல பேசிக் காட்டினான் தமிழ்!

“??”

“ஒன்னும் புரியலயா? இதெல்லாம் நீ என் கண்ணு முன்னாடியே பலதடவை கொஞ்சம் கூடசிரிக்காமல் புகழ் கிட்ட பேசின வசனம்..அதையெல்லாம்கேட்டு நானே பலதடவை இந்த புகழுக்கு பொறுமை ஜாஸ்தின்னு நினைச்சிருக்கேன்.. அப்படியிருக்க, நீ ஃபோன்ல சும்மா பேசிட்டு இருந்த விஷயம் புகழை கோபப்படுத்திருக்கும்னு நினைக்கிறியா யாழினி?”

“தமிழ்??”

“என்னமோ சரி இல்லாத மாதிரி இருக்கு.. அன்னைக்கு இருந்த மன்நிலையில் நீ அதை கவனிக்காமல் இருந்திருக்கலாம்..அதுக்கு அப்பறம் உனக்கு நடந்த கஷ்டங்கள்…”என்றவன் பாதியில் பேச்சை நிறுத்தி சிகையை அழுந்த கோதினான்.

“இட்ஸ் ஓகே பேபி.. நான்தான் இருக்கேன்ல..கண்டுபிடிக்கிறேன்”என்றான். அதேவேளையின் அன்று நடந்த அதே சண்டையைப் பற்றி ஆயிஷாவிடம் ஒப்பித்தான் புகழ். தமிழுக்கு எழுந்த அதே சந்தேகம் ஆயிஷாவிற்குமே எழுந்தது. உண்மை வெளிவருமா?

தொடரும்

Episode # 21

Episode # 23

{kunena_discuss:994}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.