“என்ன சக்ரவர்த்தி ஆச்சு..?? ஏன் இவ்வளவு பதற்றம்.. அவசரம்..?? இந்த சுவடியை நீ உன் ஊருக்கு எடுத்துக்கொண்டு போவதாய் சொன்னாயே..??”
“ஊருக்குக் கொண்டு போகத் தான் நானும் நினைத்தேன் சிம்மா.. ஆனால் நம்ம கிருஷ்ணனோட நடவடிக்கை எதுவும் செரியில்லை.. இது என் கையில் உள்ளது என்று தெரிந்தால் என் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆபத்து..அதனால் இப்பொழுதைக்கு இதை நீயே வைத்துக்கொள்..”,என்றார்...
“உங்க அண்ணனால் ஆபத்தா..புரியும் படியாக சொல் சக்ரவர்த்தி..”
“விளக்க எனக்கு நேரமில்லை...நம்மை யாரவது கவனித்தாலும் ஆபத்தே..இப்பொழுதைக்கு ஒன்றை மட்டும் நினைவில் கொள்..இந்த ஓலைச் சுவடியைப் பற்றி யார் கேட்டாலும் தொலைந்துவிட்டது என்பது மட்டும் நம் பதிலாக இருக்க வேண்டும்..நமது இந்த ப்ராஜெக்ட்டை சிறிது காலம் முடக்கில் போடுவோம்..நான் வருகிறேன்..”,என்று விட்டு அதே அவசரத்தோடு தான் வந்த காரில் ஏறிப் பறந்தார்..
சக்ரவர்த்தி சென்ற பாதையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த நரசிம்ஹனை உலுக்கிய தியா,”அந்த அங்கிள் போய் டென் மினிட்ஸ் ஆகுது..நீங்க என்னடான்னா ஸ்டாட்ச்யூ மாதிரி நின்னிட்டு இருக்கீங்க..”,என்று கேட்டாள்..
“ஏதோ யோசனை குட்டிம்மா..வேறொன்னும் இல்லை..போகலாம்..”,என்று காரில் ஏறி சாய்ந்தமர்ந்து கொண்டார்..
“அண்ணா.. உங்களை நான் ******** சாலையில் இறக்கி விடுகிறேன்.. அங்க டாக்ஸி பிடித்துக்கொள்ளுங்கள்..”,என்ற வேணுவிற்கு நரசிம்ஹனின் ம்.. ம்.. மட்டுமே பதிலாய் கிடைத்தது..
சுமார் கால் மணி நேரத்திற்குள் ******** சாலையில் கார் நின்ற பிறகே கண்கள் திறந்தார் நரசிம்ஹன்..
“வேணு.. டாக்ஸி பிடிச்சிட்டு வரியா..நான் கார்ல வெயிட் பண்றேன்..”,என்றார் நரசிம்ஹன்..
வேலையில் ஏதோ பிரச்சனை என்பதுனர்ந்த வேணுவும் தாமதிக்காமல் சரியென்று இறங்கிச் சென்றார்..
வேணு காரை விட்டு வெளியே இறங்கியவுடன் தியாவை கூர்மையாக பார்த்த நரசிம்ஹன்,”தியா..இந்த ஓலைச்சுவடியை உன் பாட்டி தாத்தா வீட்டில் பத்திரப்படுத்தி வை..நான் உன்னிடம் இதைப் பற்றி கேட்கும் பொழுது எடுத்துக் கொடு..அது வரை இதைப் பற்றி யாரிடமும் பேசாதே..”,என்று தன் கையில் இருந்த சுவடியை தியாவிடம் நீட்டினார்..
வணக்கம் நண்பர்களே..
late ud க்கு மன்னிக்கவும்...
உடல் நிலை சரியில்லா காரணத்தினால் என்னால் சரிவர ud களை கொடுக்க முடியவில்லை..
நன்றி...
வியூகம் வகுக்கலாம்...
{kunena_discuss:1111}