ஹலோ மேடம் என்ன பாக்ககூட வராம இங்க என்ன பண்றீங்க??என்றவாறு காபியை அவளிடம் கொடுக்க உதட்டோர சிரிப்போடு அதை வாங்கினாள்..
என்ன பேபி முகத்துல ஏதோ வித்யாசமா தெரியுது என்ன விஷயம்??இன்னைக்கு அப்பா அம்மா என்னபத்தி என்ன சொன்னாங்க???
அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமா..இது வேற..நீ மொதல்ல காபி குடி நா சொல்றேன்..என காபியை அவள் பருக ஆரம்பிக்க தடுக்க தோன்றாமல் அவனும் அமைதியாய் குடித்து முடித்தான்..
அவளே ஆரம்பிக்கட்டும் என அமைதிகாக்க அவள் ஓரமாய் இருந்த ஒரு கவரை கையில் எடுத்தாள்..மாமா இத்தனை நாள்ல நா உனக்கு பெருசா கிப்ட்நு எதுவும் குடுத்ததில்லல..அதான் இன்னைக்கு குடுக்கலாம்நு நினைச்சேன்..
பார்ரா சர்ப்ரைஸ் கிப்ட்லா..ம்ம் தனியாவா கடைக்கு போன ஏன் சஹிம்மா அம்மாவையாவது கூட்டிட்டு போய்ருக்கலாம்ல..
அப்போ அது சர்ப்ரைஸா இருக்காதுல மாமா..அதுவும் போக ரொம்ப தூரம்லா இல்ல இங்கதான் என்றவாறு ஒரு பெட்டியை அவனிடம் நீட்ட அதை கையில் வாங்கியவாறே ஹாங் வாட்ச்சா தேங்க் யு டா என திறக்க அதில் வாட்சின்மேல் சிறு அட்டையில் பேபி என்று எழுதியிருந்தது..அதைப் பார்த்தவனுக்கு ஒரு நொடி ஒன்றும் புரியாமல் இமைக்க மறந்து தன்னவளைப் பார்க்க..சந்தோஷமாய் தன்னவன் தோள் சாய்ந்து கொண்டாள்..
அது அட்வான்ஸ் கிப்ட் தான் மெயின் கிப்ட் 10 மந்த்ஸ்ல கிடைக்கும் குட்டி கார்த்திக்கா??குட்டி சஹானாவா என்ன வேணும் சொல்லு?என அவனை சாய்ந்தவாறே நிமிர்ந்து பார்க்க,அவள் உச்சிமுகர்ந்து இதழ்பதித்தவன் மேலும் தன்னோடு சேர்த்துக் கொண்டான்..
சோ சோ ஹேப்பி சஹிம்மா இனி நீ இன்னும் கேர்புல்லா இருக்கனும் உடம்பை பாத்துக்கனும்..முதல்ல டாக்டர்ட்ட போய்ட்டு வந்துரலாம்..அவங்க சொல்றத அப்படியே பாலோ பண்ணனும்..ஹெல்தி புட் தான் சாப்டனும்..
ஐயோ மாமா போதும் இப்போதான் கன்பார்மே பண்ணிருக்கேன் விட்டா நீ பத்துமாசத்துக்கும் புட் சார்ட்டே போட்டுருவ போல இருக்கே..எல்லாம் பண்ணலாம் முதல்ல ஸ்வீட்டிகிட்ட அங்கிள்கிட்ட சொல்லலாம் வர்ரியா??
லேசாய் அசடுவழிந்தவன்.கொஞ்சம் ஓவரா எக்சைட் ஆய்ட்டேன் சஹிம்மா..வா போலாம் பட் மெதுவா நடந்துவா பாத்து..என்றவனை அவள் முறைக்க வாயை மூடிக்கொண்டான்..விஷயத்தை கேள்விப்பட்டவுடன் வீடே அமர்களமாக கீதா சஹானா வீட்டினரை அழைத்து விஷயத்தை கூற இரவே மகளைப் பார்க்க அவர்களும் வந்துவிட கொண்டாட்டத்திற்கு குறைவில்லாமல் இருந்தது..
மூன்று மாதங்களுக்குப் பிறகு..
திருமணகளை அந்த அரங்கெங்கும் நிறைந்துகிடக்க பட்டுவேட்டி சட்டையில் சிவா மணவறையில் அமர்ந்து தன்னவளை தன்னிடம் காட்டுவார்களா மாட்டார்களா என்ற கடுப்போடேயே மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருக்க மணமகள் ஷரவந்தி அழகான மஞ்சள் நிறப்புடவையில் பச்சை பார்டரோடு கூடிய காஞ்சிப்பட்டில் அழகான தங்க ஆபரணங்கள் அலங்கரித்திருக்க அம்சமாய் தயாராகிக் கொண்டிருந்தாள்..அங்கு ஷரவனோ கர்மசிரத்தையாய் தன்னவளை சைட் அடித்தவாறு அவளோடு சேர்ந்து வேலை செய்வதாய் பாவலா காட்டிக் கொண்டிருந்தான்..
எங்க நம்ம ஹீரோநு தான கேக்குறீங்க வாங்க வாங்க பாக்கலாம்..
லேசாய் மேடிட்ட வயிரோடு ஆரஞ்ச் நிற பட்டுப்புடவையில் தாய்மைக்கான அழகோடு சஹானா ஷரவந்தியருகில் அமர்ந்து அவளுக்கு உதவிக் கொண்டிருந்தாள்..சஹி..
அடடா இதோட அஞ்சு தடவை வந்துட்ட அண்ணா உனக்கு என்னாதான் வேணும் பேசாம அண்ணிய கூட்டிட்டு போய் அங்க எங்கேயாவது உக்காரு என ஷரவந்தி முறைக்க அவள் தோழிகள் சிரிக்க சஹானாவோ தலையில் அடித்துக் கொள்ளாத குறையாய் அவனை வெளியே இழுத்து அருகிலிருந்த அறைக்கு வந்தாள்..
மாமா மானம்போகுது நீ ஏன் இப்படி பண்ற..
இல்ல சஹி சாப்ட எதாவது வேணுமாநு..
மாமா..
ஹே ரொம்ப பண்றீங்க டீ எல்லாரும்..அவனவன் கஷ்டம் அவனவனுக்கு..உனக்கென்ன ஜாலியா பாப்பாவ வயித்துக்குள்ள வச்சுகிட்டு பத்திரமா பாத்துக்குற..எனக்கு தான் நீ வாமிட் பண்றத பாக்கும்போதும் டயர்டா இருக்கும்போதும் என்ன பண்றதுனே புரிய மாட்டேங்குது..நேத்து புல்லா அவ்ளோ டயர்டா எழுந்துக்க முடியாம இருந்த இன்னைக்கு என்னன்னா கல்யாண பொண்ணைவிட சூப்பரா ரெடி ஆகி நிக்குற..மூளை குழம்புது எனக்கு..
மெதுவாய் அவன் கையெடுத்து தன் வயிற்றில் வைத்து மாமா இங்க இருக்குறது என் கார்த்திக்கோட பாப்பா தான அப்போ அதுவும் கார்த்திக் மாதிரியே என்ன பத்திரமாதான பாத்துக்கும்..அப்பறம் என்ன..நீ என் பக்கத்துல இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் நாங்க பத்திரமாதான் இருப்போம்..இந்த வாந்தி மயக்கம்லா சகஜம் மாமா..இந்த கஷ்டம்கூட படலனா குழந்தையோட அருமை நமக்கு எப்படி தெரியும்..தைரியமா இரு கார்த்திக்..என்று கண்சிமிட்ட..