ஆமாப்பா கொஞ்ச நாளாவே எங்க ரெண்டு பேருக்கும் சின்னவன் மேல கொஞ்சம் கவனம் இருந்தது..அப்போ சஹானாகிட்ட தான் கேட்டோம் அவதான் விஷயத்தை சொன்னா..இருந்தும் நீங்களே சொல்லட்டும்நு விட்டுட்டோம்..இன்னைக்கு நம்ம தேவி குட்டி போட்டு உடைச்சுட்டா என சிரிக்க..
கார்த்திக் சஹானாவைப் பார்த்தான்,என்ன ஏன் மொறைக்குற மாமா நீ மட்டும் மணி அண்ணாகிட்ட பேசினத என்கிட்ட சொன்னியா??அதுக்கு இது சரியா போச்சு என உதடுசுழித்து பழிப்பம் காட்ட.
இதோ வரேன் எதுக்கு எது சரினு நா சொல்றேன் என அவளைத் துரத்த மாமா ஆபிஸ் நேரமாச்சுல நீ கிளம்பு என்றவாறே அவள் அறைக்கு ஓடினாள்.அறைவாசலிலேயே அவளை பிடித்திருந்தவன் கைச்சிறையில் அடைத்து ஏண்டீ சொல்லல??
கார்த்திக் நீயே எவ்ளோ பொறுப்பைதான் மேனேஜ் பண்ணுவ சரி உனக்கு ஹெல்ப் பண்ணலாமேநு தான்..என்றவாறே அவன் சட்டையை சரிசெய்தாள்..
வர வர உனக்கு என்மேல பயமேயில்லாம போச்சு சரியில்லயே அப்பப்போ கொஞ்சம் ட்ரீட்மெண்ட் குடுத்தா தான் சரி வரும் என அவள் இதழ்நோக்கி குனிய..போதுமே ஒழுங்கா ஆபீஸ் கிளம்பு மாமா..
ம்ம் சரி அப்பா அம்மா ஷரவன் விஷயத்துக்கு ஒண்ணும் சொல்லலையா உடனே ஓகே சொல்லிட்டாங்களா??
ரொம்ப அப்போஸ்லா பண்ணல பட் கொஞ்சம் யோசிச்சாங்க அவங்களுக்கு மறுக்குற அளவு எந்த காரணமும் இல்லதான் பட் எங்கப்பா பெரியப்பா எதாவது சொல்லுவாங்களோநு தயங்கினாங்க நாதான் அவங்ககிட்ட நா பேசிக்குறேன் உங்க விருப்பத்தை சொல்லுங்கநு சொன்னேன்..அப்பறம் தெளிவாய்ட்டாங்க..ஏன் மாமா நா வேணா இன்னைக்கு நாளைக்குள்ள போய் அப்பாகிட்ட பேசிட்டு வந்துரவா??ஆச்சுனு அவங்க கல்யாணத்தை முடிச்சுருவோம் கௌரி அதுக்கப்பறம் படிக்குறதோ வேலைக்கு போறதோ அவ இஷ்டம் என்ன சொல்ற??
வீட்டோட மூத்த மருமக சொன்னா சரிதாங்க எஜமானியம்மா என சிரிக்க அவளும் கலந்து கொண்டாள்..
ம்ம் கூடிய சீக்கிரம் கல்யாண களை கட்ட போகுது வீடு..ஆங்ங் அதோட ஒண்ணு சொல்ல மறந்தே போய்ட்டேன் ஷரவன் கல்யாணம் வரைதான் உனக்கு டைம் எவ்ளோ ஜாலியா இருக்க முடியுமோ இருந்துக்கோ அதுக்கப்பறம் மேடம் ரொம்ப பிஸி ஆய்டுவீங்க..புரியுதா??
என்ன மாமா சொல்ற என்ன பிஸி??
சர்ப்ரைஸ்ஸ்ஸ் ஓ.கே எனக்கு டைம் ஆச்சு பை சஹி.ஈவ்னிங் பாக்கலாம் பை என கன்னத்தில் இதழ்பதித்துச் சென்றான்..
அடுத்த இரண்டு நாட்களில் ஓரளவு அனைவரிடமும் சஹானா பேசியிருக்க வீட்டு லேண்ட் லைனிற்கு அழைப்பு வந்தது..சஹானா எடுத்து பேச ஷரவந்தி அழைந்திருந்தாள்..
சொல்லுங்க டீச்ரம்மா எங்களையெல்லாம் நியாபகம் இருக்கா பக்கத்துல இருக்கநு பேரு பாத்து மாசக் கணக்கா ஆச்சு..என்ன சொல்றான் என் பாச மலர் அண்ணன்..
அண்ணி அண்ணி பொறுமையா திட்டுங்க நான் மட்டும்னா பரவால்ல உங்க மருமகனோ மருமகளோ வேற கேட்டுட்டு இருக்காங்க இல்ல அப்பறம் என்னடா இது நம்ம அத்தை இவ்ளோ கோபகாரங்களா இருக்காங்களேநு நினைச்சுறப்போறாங்க என்று சிரிக்க
சஹானாவிற்கு குஷி தாங்கவில்லை..வாவ் ஷரவ் கங்க்ராட்ஸ்..சோ ஹேப்பி பார் யூ போத் டாக்டர் செக் அப் முடிஞ்சுதா???ஸ்வீட்டி அங்கிள் சீக்கிரம் வாங்க..ஆமா நம்ம வீட்டு ராசியோ என்னவோ எப்போ கல்யாணம் நடந்தாலும் யாராவது கன்சீவ் ஆய்டுவாங்க போலயிருக்கே..
வாவ் அண்ணி ஷரவன் கௌரி மேட்டரை சொல்லியாச்சா எல்லாரும் ஓ.கே சொல்லிட்டாங்களா எப்போ கல்யாணம்??
ம்ம் இன்னும் இரண்டு மாசத்துல ஷரவ் அதுகுள்ள உடம்பை தேத்தி குட்டிப் பாப்பாவோட குட்கேளா வந்துரு..இதோ ஸ்வீட்டி வந்துட்டாங்க குடுக்குறேன் பேசு என்றவள் தன் மொபைலை எடுத்து கார்த்திக்கிற்கும் ஷரவனுக்கும் விஷயத்தை கூறினாள்.
வேகத்திற்கு குறைவில்லாமல் நாட்கள் உருண்டோட அந்த அற்புத மூகூர்த்தத்தில் ஷரவன் கௌரியின் திருமணம் இனிதே நடந்தேறியது..
வெல்கம் டூ பாவப்பட்ட கணவர்கள் சங்கம் மச்சான் என சிவா கைகொடுக்க ஷரவந்தி அவனை முறைத்தாள்..அம்மா தாயே பழைய நியாபகத்துல என்ன அடிக்க ஓடி வந்துராத என் குட்டி பாப்பா பாவம்..
ஓ அப்போ என் மேல அக்கறை கிடையாது உங்க பாப்பாவுக்காக தான் கவலபடுறீங்க??
பாத்துக்கோ மச்சான் இதுதான் கணவர்களின் நிலைமை என பாவமாய் கூற அங்கே சிரிப்பொலி அடங்க வெகுநேரம் ஆனது..மணி கார்த்திக்கின் கைப்பற்றி கண்களில் வைத்துக் கொண்டார்..
என்ன அண்ணா இதெல்லாம்??
இல்ல தம்பி என் மகளும் நானும் பண்ணிண புண்ணியம்தான் இப்படி ஒரு குடும்பம் என் பொண்ணுக்கு கிடைச்சுருக்கு..மனசு நிறைஞ்சிருக்குப்பா..ஆதரவாய் தோள்தட்டி அவரை சமாதானப்படுத்தியவனை கர்வமாய் பார்த்தாள் அவனின் சரிபாதி..