(Reading time: 27 - 53 minutes)

தன்மேல் அவளை சாய்த்துக் கொண்டவன்.என்ன வேணா சொல்லு சஹிம்மா இந்த விஷயத்துல உங்களுக்கு வர்ற தைரியம் ஆம்பளைங்களுக்கு எப்பவுமே இருக்குறதில்ல..சரி இனி கொஞ்சம் தெம்பா இருக்க பழகிக்குறேன்.எனும்போதே கதவு தட்டப்படும் ஓசைகேட்டு கார்த்திக் கதவைத் திறக்க கீதா பதட்டமாய் இருந்தார்..

என்ன கார்த்தி சஹானாக்கு மறுபடியும் வாமிடிங்கா??ஷரவ் தான் நீ கூட்டிட்டு போனனு சொன்னா என்னாச்சுடா??என கேட்க குறுஞ்சிரிப்போடு கதவை அகலதிறந்து சஹானாவை பார்க்க அவள் சத்தமாகவே சிரித்தாள்..

ஸ்வீட்டி மாமாவே பரவால்ல நீங்களுமா??

அட நா எவ்ளோ பயந்துபோய் ஓடி வரேன் நீ இங்க என்ன கிண்டல் பண்ணிட்டு இருக்க உதைகுடுக்க போறேன் வாங்க மணமேடைக்கு ஷரவ் போயாச்சு..நாத்தனார் முடிச்சு போட வேண்டிய நீ இங்க இருக்க வா வா…

அடுத்த சில நிமிடங்களில் அனைவரின் ஆசீர்வாதத்தோடு சிவா ஷரவந்தி திருமணம் இனிதே  நடந்து முடிந்தது..சம்பிரதாயங்கள் முடிந்து ஷரவந்தி சிவா வீட்டுக்கு கிளம்ப அவளை அழவிடாமல் ஏதோ ஒன்றை பேசியவாறு சிவா வம்பிழுத்துக் கொண்டேயிருந்தான்..பெற்றவர்களுக்கு அதுவே நிறைவாய் இருந்தது..கார்த்திக்கும் ஷரவனும் அவர்களோடு கிளம்ப சஹானா தானும் வருவதாய் கூறினாள்..கார்த்திக் முகம் உடனே பதட்டமாய் மாற சஹானா கைகூப்பினாள்..வேணாம் மாமா நா வரல நீயே போய்ட்டு வா மறுபடியும் முதல்ல இருந்து என்னால முடியாது..என முடிப்பதற்குள் அங்கு அனைவருமே சிரித்துவிட்டனர்..

ஷரவந்தியை விட்டு கிளம்பும் போது கார்த்திக் வழக்கம்போல் பொறுப்பான அண்ணணாய் அறிவுரை கூறி தன் கவலையை மறைத்து விடைபெற ஷரவனோ கண்கலங்கிவிட்டான்..தாய் வயிற்றில் ஜனித்த நொடியிலிருந்து ஒன்றாகவே இருந்தவள் இப்போது வேறு வீட்டிற்கு வந்துவிட்டதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..எந்தளவு இருவரும் சண்டையிட்டார்களோ அதேயளவு அன்பும் ஒருவர்மேல் ஒருவருக்கு இருக்க ஷரவந்தியும் அத்தனனைநேரம் கட்டுப்படுத்தி வைத்த கண்ணீரை அவன் தோள் சாய்ந்து கொட்டித் தீர்த்துவிட்டாள்..ஷரவ் பாத்து நடந்துக்கோ எல்லாரையும் நல்லா பாத்துக்கோ அப்பப்போ கால் பண்ணு சரியா?

ம்ம் சரிடா நீயும் கால் பண்ணு..வில் மிஸ் யூ சோ மச்டா..சிவா ஆதரவாய் அவள் தோள்பற்ற ஓரளவு நிதானித்திருந்தாள்..

என்ன ஷரவன் நீ அவளை தேத்துவனு பாத்தா நீயும் இப்படி எமோஷனல் ஆய்ட்டு இருக்க??-கார்த்திக்..

விடுங்க கார்த்திக் நாளைக்கே கௌரி வந்தப்பறம் ஷரவனுக்கு ஷரவ் பத்தி யோசிக்ககூட நேரம் இருக்காது அதான் இப்போவே பீல் பண்ணிக்குறான் இல்ல மச்சான் என கண்சிமிட்ட..உடனே ஷரவ் அவனிடம் டேய் அப்படியா டா அவ வந்தா என்ன கண்டுக்க மாட்டியா??அப்பறம் நாத்தனாரா இருக்க மாட்டேன் நாரதரா மாறிடுவேன் பாத்துக்கோ!!

மாமா சந்தோஷமா அவ என்ன மதிச்சு அன்பா பேசுறதே எப்பவாவதுதான் அதையும் இப்படி ஆக்கிட்டீங்களே..என பாவமாய் பார்க்க..

விடு மச்சான் வீடுக்கு ஒரே மாப்ளை மச்சினர்ங்க ரெண்டு பேருமே ரொம்பபபப நல்லவங்க இப்படி எதாவது கலகம் மூட்றதவிட வேற வழியில்ல அப்பறம் எனக்கும் எப்படிதான் டைம் பாஸ் ஆகும் சொல்லுங்க…

நல்ல டைம்பாஸ் மாமா..கீப் இட் அப் என்ன ஆள விடுங்க நா ஓடிறேன்.

சகோதரியை நல்ல இடத்தில் ஒப்படைத்த திருப்தியோடு சகோதரர்கள் வீடு திரும்ப ஏனோ வீடே வெறிச்சென்று இருப்பதாய் தோன்றியது..கீதாவும் மோகனும் மனதளவில் பெண்ணை பிரிந்த தவிப்போடு இருந்தாலும் ஒன்றும் காட்டிக் கொள்ளவில்லை..கார்த்திக் சஹானாவை தேடி அறைக்குச் செல்ல கட்டிலில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தாள்..

வா மாமா ஷரவ் எப்படியிருக்கா??ரொம்ப அழுதாளா??

ம்ம் இல்ல சஹிம்மா பரவால்ல ஷரவன்தான் ரொம்ப எமோஷனல் ஆய்ட்டான்..

ம்ம் ட்வின் சிஸ்டர் இல்ல..ரொம்ப மிஸ் பண்ணுவான்..நீ மட்டும் என்ன உள்ளுக்குள்ள பீல் பண்ணுவ வெளில காட்டிக்க மாட்ட..எனக்கே என்னவோ வீடே வெறிச்சு போனமாதிரி இருக்கு..

ம்ம் உண்மைதான் சஹி..பட் இது எல்லாரும் நடக்குற ஒரு விஷயம்தான எங்க அம்மாவும் இப்படிதான் வந்துருப்பாங்க..நீயும்தான்..பட் பெண்கள் எப்பவுமே க்ரேட் சஹிம்மா 20-23 வருஷம் வாழ்ந்த வீட்டை சொந்தங்களையெல்லாம் விட்டு புது மனுஷங்க புது இடம் யாரு எப்படிநு ஒண்ணும் தெரியாது..இனி நீ இங்கதான் வாழணும்னு விடும்போது அதை ஏத்துகிட்டு கொஞ்சநாள்லயே அதுதான் தன்னோட குடும்பம்நு மாத்திகிட்டு வாழ்நாள் பூரா அவங்களுக்காகவே வாழறதெல்லாம் பெரிய விஷயம்டா..ஆம்பளைங்களால இதெல்லாம் முடியுமாநு கூட தெரில..வெளிலயிருந்து பாக்கும் போது இது ஒரு பெரிய விஷயமா இதுதான் காலம்காலமா இருக்குற சம்பிரதாயம்நு சொல்லிட்டு போய்டலாம்..ஆனா நாம தூக்கி வளர்த்த பொண்ணோ அக்காவோ தங்கையோ பிரியும்போதுதான் இவ்ளோ யோசிக்க தோணுது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.