(Reading time: 17 - 33 minutes)

“ப்ளீஸ்... நீங்க எழுந்துருங்க.. எனக்கு சங்கடமா இருக்கு.. என் சிஸ்டர் வந்துடுவா இப்போ... ஷி வில் டேக் கேர்...”என்று அவள் முடிக்க... சரியாக காவ்யாவும் அப்பொழுது அவளிடம் வந்து... தாராவின் கைகளை பிடித்துக்கொண்டே... “அக்கா... சாரி அக்கா... வேணும்னே செய்யல.... ஒரு ஆர்வத்துல ஓவர் ஸ்பீட்ல வந்துட்டேன் போல அக்கா... கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தா என்ன ஆகி இருக்கும்... ஐயோ... அக்கா.. சோ சாரி அக்கா...” என்று கைகளில் நீர் வர கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“வீட்டுக்கு போகலாமா காவ்யா...” என்று தாரா அழுத்தம் திருத்தமாக கேட்டதில்... கண்டிப்பாக அவளுக்கு கச்சேரி இருக்கிறது என்று தெள்ளத்தெளிவாக விளங்கி இருக்கும், காவ்யாவிற்கு.

“ஹ்ம்ம்...” என்று நன்றியுடன் ககனையும் உதய்யையும் பார்த்துவிட்டு.. தாராவை கைத்தாங்கலாக அழைத்துச்சென்றாள்.. தாராவும் மென்னகையுடன் விடைபெற்றாள்.

வர்கள் சென்ற பிறகு நண்பர்கள் இருவரும், அவர்களது காரில் அமர்ந்து.. ‘ஒப்பப்...’ என்று பெருமூச்சுவிட்டு, உடனே சிரித்துக்கொண்டனர். உதய் காரோட்ட... சவுகர்யமாக சீட்டில் சாய்ந்து கொண்ட ககன்... கண்களை மூடிக்கொண்டு சற்றுமுன்பு நிகழ்ந்தவைகளை நினைத்துப்பார்க்க ஆரம்பிக்க..... சற்று நேரத்தில். “oh my God......................” என்று கூவினான்..!!

ஏன்...? எதற்காக..??

ககனிடமே கேட்போமே... இன்னும் பதினைந்து நாட்களுக்கு பிறகு..!

Episode # 07

Episode # 09

{kunena_discuss:1151}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.