‘முதல்லே சாக்லேட் பிரிச்சு எனக்கு கொடு. நான் விட்டுடறேன்..’
‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நமக்குள்ளே கல்யாணம் எல்லாம் சரிப்படாது’
‘அனும்மா ப்ளீஸ்... ‘ அவளை விடுவித்து அவள் கரம் பற்றிக்கொண்டான் ‘ஏற்கனவே மனசு சரியில்லை. நீயும் சேர்ந்து விளையாடதே. உனக்கு என்னை பிடிக்கும்னு எனக்கும் தெரியும். உனக்கும் தெரியும்.’
‘மனம் சரியில்லையா? அதனால்தான் என் குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பவில்லையோ?’ யோசனையுடன் பார்த்தாள் ‘என்னாச்சு ஹரிஷ்?
‘அது இருக்கட்டும்.’ என்றான் அவன் ‘இந்த கடல், இந்த வானம் சாட்சியா இப்போ நான் உனக்கு சத்தியம் பண்றேன். இப்போ நான் பிடிச்ச உன் கையை எது வந்தாலும், என்ன நடந்தாலும் என் மூச்சு இருக்கிறவரைக்கும் விடமாட்டேன்னு. நீயும் அதே வாக்கு கொடுப்பியா?
‘என்ன வரும் ஹரிஷ் நமக்கு நடுவிலே’ லேசான பயம் சேர்ந்த குரலில் கேட்டாள் அவள்.
‘அது தெரியலை அனு. பட்......’ ஒரு பெருமூச்சு எழுந்தது அவனிடத்தில். ‘சத்தியம் பண்ணு அனும்மா ப்ளீஸ். மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்’
‘எது வந்தாலும், என்ன நடந்தாலும் என் மூச்சு இருக்கிறவரைக்கும் விடமாட்டேன் ஹரிஷ்’ என்றாள் அவன் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு.
தொடரும்...
{kunena_discuss:1147}