மீண்டும் அவரது அறைக்கு செல்ல அவகாசம் கிடைக்கவில்லை.
கிடைத்த நேரத்திலும் அவளுக்குப் போகத் தோன்றவில்லை.
அவர்கள் பணக்காரர்கள். அதனால் கொஞ்சம் தள்ளியே இருப்போம். என்று அன்றைய பணி முடிந்ததும் கிளம்பிவிட்டாள்.
மறுமுறை அவள் பணிக்கு வந்த போது அவளுக்கு வேறு பகுதியில் வேலை ஒதுக்கப்பட்டிருந்தது. அதனால் அவளுக்கு அங்கே செல்ல மீண்டும் வாய்ப்பே கிடைக்கவில்லை.
இரண்டு நாட்கள் கழித்து அவள் ஓய்வறையில் இருந்த போது அறையின் வாசலில் நிழலாட திரும்பிப்பார்த்தாள்.
அங்கே வள்ளியம்மை நின்று கொண்டிருந்தார்.
“அம்மா! நீங்களா? நீங்க இன்னும் கிளம்பலையா?”
“நான் இங்கே தங்கியிருக்கிறது அவ்வளவு கஷ்டமாகவா இருக்கிறது?”
“அம்மா! இது ஹாஸ்பிட்டல். இங்கே வர்றவங்க சீக்கிரம் வீட்டுக்குப் போகனும்னுதா
...
This story is now available on Chillzee KiMo.
...
விடும் அளவிற்கு என்ன செய்துவிடுவாள்?
அவருக்கு அப்போது புரியவில்லை.
இப்போது புரிந்தது.
மகனைப்பற்றிய உண்மை தெரிந்தால் அவள் அவனை மணக்க மறுத்துவிடுவாள். அதுதான் காரணம்.
தென்றல் போல் ஒருத்தி மனைவியாய் வருவது மகனின் வாழ்க்கைக்கு நல்லதுதான்.
ஆனால் அவன் நிலைமை?