நடந்ததை சொன்னவுடன், "அப்பாடி அப்ப உன் புருஷன் உனக்கு மட்டும் தான்னு நீ நிம்மதியா இருக்கலாம். ஆனா நீ லூசு டி மதி", என்றாள் காவ்யா.
"நான் என்ன செஞ்சேன் காவ்யா?"
"பின்ன, அண்ணா இன்னும் நீ படிச்சு முடிக்கிற வரைக்கும் காத்துட்டு இருக்கணும்னு சொல்லிருக்காங்க. நீ பேசாம நின்னுருக்க?"
"வேற என்ன செய்ய சொல்ற?"
"லூசு, எதுக்கு அவ்வளவு நாள் காத்துருக்கணும்னு கேட்டுருக்கலாம்ல?"
"என்னது????"
"என்ன இப்படி அதிர்ச்சியாகுற? சட்டு புட்டுன்னு, கட்டி புடிச்சு உம்மா கொடுக்காம, வாயை மூடிட்டு நின்னுருக்கா"
"ச்சி போடி., தப்பு தப்பா பேசுற"
"தப்பு தப்பா பேசுறேனா? நேரம் தான். என் கல்யாணத்துக்கு முன்னாடி வயித்தை தள்ளிட்டு வந்து நில்லு. அப்ப இருக்கு உனக்கு? இப்ப மட்டும் தப்பு இல்லையான்னு கேப்பேன்"
அவள் கையை கிள்ளிய மதி வெக்கத்துடன் சிரித்தாள்.
அன்று மாலையும் அவளை கூப்பிட வந்தான் சூர்யா. காவ்யா வீட்டுக்கு போவதுக்கு முன்பே அவள் வீட்டில் இருந்தார்கள் இருவரும். அதுக்கு பின் தான் காவ்யா சென்றாள்.
ஏற்கனவே அவளுக்கு விஷயம் தெரியும் ஆதலால் "ஹாய் அண்னா", என்று படியே உள்ளே சென்றாள்.
முறை படி அவர்களை அழைத்து விட்டு அவர்கள் கொடுத்த காபியையும் குடித்து விட்டு வீட்டை நோக்கி பைக் சென்றது.
அடுத்து இரண்டு நாள்களில் ஊரில் இருந்து அனைவரும் ரிசப்ஷனுக்கு வந்து விட்டார்கள். அது சந்தோசமாக இருந்தாலும் கொலை வெறியுடன் தன்னை முறைக்கும் சித்தியையும், அவள் மகள் தேன் மொழியையும் பார்த்து இத்தனை நாள் இருந்த உற்சாகம் வடிந்தது போல உணர்ந்தாள் கலைமதி.
அவள் முகத்தில் வந்து போன உணர்வுகளை படிக்க முயற்சி செய்து முடியாமல் "இவளுக்கு என்ன ஆச்சு?", என்று யோசித்தான் சூர்யநாராயணன்.
தித்திப்பு தொடரும்......
{kunena_discuss:1169}