போட்டித் தேர்வு முடிந்து ஊருக்கு கிளம்பியவர்களை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். வனிதாவிற்கு அவளைப் பற்றி எதுவும் தெரியாது. வழியில் பார்த்துக் கொண்டதோடு சரி. அப்படியிருந்தும் தனக்கு அவள் உதவி செய்திருக்கிறாள் என்றுதான் அவள் மீது மிகுந்த அன்பு கொண்டாள்.
வீட்டுக்கு வந்த பிறகு அவர்களை அறிமுகப்படுத்தினாள்.
அப்போதுதான் பூமிகா பிறந்திருந்த நேரம்.
காந்திமதி அவர்களுக்கு சாப்பாடு தயார் செய்தார். அன்று இரவு அங்கேயே தங்கிவிட்டு மறுநாள் பகல் நேரத்தில் செல்லலாம் என்று அவர்கள் சொன்னதால் அங்கேயே தங்கினர்.
“ஆமா. அண்ணன் எங்கே?”
வனிதா விசாரித்தாள்.
“அவர் வெளிநாடு சென்றிருக்கிறார்.”
அது உண்மை என்பதால் அவளால் நிமிர்வுடன் சொல்ல முடிந்தது.
அன்று இரவு அங்கேயே தங்கிவிட்டு அ
...
This story is now available on Chillzee KiMo.
...
்காலம் நல்லாருக்கனும்னுதான். அவ நல்லா இருந்தா போதும். சின்னவளும் படிச்சிக்கிட்டிருக்கா. அவ படிப்பு முடிஞ்சதும் அவளுக்கும் நல்ல வரனாய் பார்த்து முடித்துவிட்டால் பிறகு அம்மாவும் என் பிள்ளைகளும் தான். அவங்க வளர்றதுக்கு இன்னும் காலம் இருக்கு. அதுக்குள்ள நான் அவங்களுக்கு தேவையானதை சேர்த்துடுவேன்.”