அவனிடம் ஏதாவது பேச்சுக் கொடுக்குமாறு அவனைப் பரிசோதிக்க வந்தபோது மருத்துவர் சொல்லிவிட்டு சென்றிருந்தார். அதனால் அவளும் அவனிடம் ஏதாவது பேசிக்கொண்டேயிருந்தாள்.
வீட்டுக்குள் நுழைந்தபோது தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதை பூமிகா ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். தந்தையையும் தாயையும் பார்த்ததும் அவர்களையும் தன்னோடு அமரச் சொன்னாள்.
தென்றல் பயத்துடனே கணவனைப் பார்த்தாள். அவன் என்ன செய்யப் போகிறானோ? இது வரைக்கும் மகளுக்கு எதுவும் தெரியாது.
தென்றல் மகளுக்கருகில் போய் அமர்ந்து கொண்டு கணவனையும் அமரச் சொன்னாள்.
அவனும் அவளுக்கருகில் வந்து அமர்ந்தான். அப்போது வள்ளியம்மை வர தென்றல் எழுந்துகொள்ள முயற்சி செய்தாள்.
“இரு.” என்றுவிட்டு அவர்களுக்கு குடிப்பதற்காக பானம் கொண
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்ல.”
“உத்தரவு மகாராணி.” என்று உடலை முன்வளைத்துக் கூறியவன் அவள் தனது கனவில் வருவதையும் அவளது நெருக்கத்தை உணர்ந்ததையும் அது கனவா இல்லை நடந்த நிகழ்வா என்று தெரியாமல் பட்ட பாட்டையும் அவளது அரவணைப்புக்காக ஏங்கியதையும் உண்மையிலேயே பைத்தியம் பிடித்துப்போய்விடுமோ என்று பயந்ததாகவும் சொன்னான்.