வள்ளிம்மை ஆதங்கத்துடன் கேட்டார்.
அவள் புரியாமல் அவரைப் பார்த்தாள்.
“வனிதா என்ன சொன்னாள்? முகிலை அவள் ஊர்ப்பக்கம் பார்த்தாளாம். அவன் ஏன் அங்கே போனான்? உன்னை தேடித்தான். எனக்கு நீ அங்கே இல்லைன்னு தெரியுமே? அப்படியிருக்க நான் அவனை அங்கே அனுப்புவேனா? யோசித்துப்பாரு. தன்னோட வாழ்க்கையில் ஒரு பெண் இருக்கான்னு அவன்தான் சொன்னான். அவளைக் கண்டு பிடிக்க முடியாம அவன்தான் துடித்துப் போனான். அதைப் பார்த்துட்டு நான் ஊமையாதான் நின்னேன். அப்புறம் என்னால் என்ன செய்ய முடியும்? நீ எங்கே இருக்கேன்னு தெரிஞ்சாதானே நான் அவனுக்கு சொல்ல முடியும்? அவனாதான் உன்னைத் தேடி கண்டுபிடித்தான்.”
அதற்கு மேலும் அவளால் அதை நம்பாமல் இருக்க முடியவில்லை.
முகிலன் இரவு நெருங்கியும் காணாததால் தவித்துப்போனாள்.
அவளது தவிப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
விழுந்து கிடப்பதால் உண்மையிலேயே மயங்கி விழுந்து கிடந்தாலும் அவர்களை குடிகாரர்களாகத்தான் இந்த உலகம் பார்க்கிறது. அவர்களைக் குற்றம் சொல்லி என்ன பயன்?
இப்போதைக்கு முகிலனின் இந்த நிலைமைக்கு யார் காரணம் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
அதற்குள் வள்ளியம்மையும் தென்றலும் வந்துவிட்டனர்.