அன்றும் அப்படித்தான், காரில் வெல்டிங் வேலை நடந்துக் கொண்டிருந்தது. சுகுமார், முருகனிடம் சண்டைப் பிடித்து தானே செய்வதாக சொல்லி அவர்களிடம் பிடுங்காத குறையாக வாங்கி வெல்டிங் பத்த வைத்துக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் அவளோடு மல்லுக் கட்டிக் கொண்டிருக்க, அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதவனோ, பின் அவன் வேலையில் கவனம் வைக்க ஆரம்பித்துவிட்டான்.
அன்று இரவு சாப்பிட்டு முடித்ததும் உறங்குவதற்காக அறைக்கு வந்தவன், சிறிது நேரம் படுத்தப்படியே விழித்திருந்து வருணாவை பற்றி சிந்தித்தப்படி இருந்தவனுக்கு கொஞ்சம் தாமதமாக தான் உறக்கம் வந்தது. சிறிது நேரத்தில் அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல, “ஆ எரியுது..” என்ற வருணாவின் அலறலில் என்னவொ ஏதோ என்று பதட்டத்தோடு எழுந்து வந்தான்.<
...
This story is now available on Chillzee KiMo.
...
டியவன், “கொஞ்சம் நேரம் அப்படியே படு.. கொஞ்ச நேரத்துல எரிச்சல் போய்டும்” என்று அவன் சொன்னதும், தலையை ஆட்டியவள், படுத்துக் கொண்டாள். அமைதியாக அவள் படுத்ததும், அவனும் அறைக்குள் சென்று படுத்துக் கொள்ள, ஒரு பத்து நிமிடம் தான் சென்றிருக்கும், “அய்யோ என்னால முடியல..” என்று எழுந்து திரும்ப கத்தினாள்.