“என்னிக்கு சப்மிட் செய்யணும்ன்னு சொன்ன” நடந்து கொண்டிருந்தவள் நின்று விட்டாள்.
“அது வந்து மண்டேன்னு தான் சொன்னாங்கன்னு நினைக்கிறேன். இன்னும் த்ரீ டேஸ் இருக்கே” அவன் சொல்ல இப்போது ஹரிணிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
“நான் இன்னும் ஒரு டெலிவரி கூட மேற்கொள்ளவில்லை ஹரி” முதல்முறை அவள் குரல் சற்று கம்மி ஒலிப்பதைக் கேட்கிறான்.
“ஏன் என்னாச்சு. உனக்கு எப்படி செய்வதுன்னு தெரியலையா. நாளைக்கு என் கூட இருந்து எப்படி டெலிவரி செய்வதுன்னு பாரு. நான் சொல்லித்தரேன்” அவன் அவளிடம் சொல்ல அவள் இப்போது ரௌத்திரம் கொண்டாள்.
“அதெல்லாம் நீ ஒன்றும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. எனக்கு எப்படி செய்யணும்னு நல்லா தெரியும்”
“அப்போ ஒரு வாரமா ஒரு டெலிவரி கூட ஏன் பார்க்கலை”
“பிடிக்கலை. அதனால செய்யலை” இப்போது ஹரிணி அவளாக இருந்தாள். அதாவது அவனுக்கு மட்டும் கேட்குமாறு ஆனால் அதே சமயம் கோபக்குரலில் கர்ஜித்தாள்.
நடந்து கொண்டே வந்தவர்கள் சற்றே இருளான பகுதியை கடந்து கொண்டிருந்தனர்.
சுற்றும் முற்றும் ஆள் அரவமும் இல்லை எனும் போதும் மருத்துவமனை வளாகம் என்பதால் பயமில்லை.
“ஏன் பிடிக்கலை” சற்று அதிக கொழுப்புச் சத்து தான் இருக்க வேண்டும். தானாக சென்று அரியின் வாயில் தலையைக் கொண்டு போய் கொடுப்பானா ஹரி!!!
அவன் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. சட்டென அவனது வெள்ளைக் கோட்டை கொத்தாகப் பிடித்தாள்.
அவனை விட அவள் உயரத்தில் மிகவும் குறைவு. அவள் திடீரென அப்படி செய்ததால் நிலை தடுமாறியவன் அவள் தோள்களை பற்றிக் கொள்ள இன்னொரு கையால் அவன் கைகளை தட்டி விட்டாள்.
“பர்ஸ்ட் டெலிவரி பார்த்த உடனேயே நீ ஹேமா ஹேமந்த் எல்லோரும் உங்க அம்மா கிட்ட சொல்லி சந்தோஷமா ஷேர் செய்தீங்களே. எனக்கும் ஆசை இருக்காதா. என் அம்மாகிட்ட சொல்லணும்னு. ஆனால் எப்படி சொல்லுவேன் சொல்லுடா எப்படி சொல்லுவேன்” கோபத்தில் தொடங்கி கண்ணீரில் அவன் முன் கேள்வியை வைத்தாள்.
நிதனாமாக அவள் கைகளை தனது கோட்டில் இருந்து விலக்கியவன் அவள் கரங்களை மென்மையாக பற்றிக் கொண்டு பதில் சொன்னான்.
இப்போது ஆடிப் போவது அவளது முறை ஆனது.
அதைக் கேட்டவள் இமை கூட தட்டாமல் அவனையே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
முடிவிலியை நோக்கி ...
{kunena_discuss:1137}