கீதாவின் கண்களில் கண்ணீரை கண்ட பருவதம் அம்மாள். குழந்தையின் பசியை அவளால் ஆற்ற முடியவில்லை என்பதலாள் தான் அவள் அழுகிறாள். என்று தவறாக நினைத்து கொண்டார்.
அவளின் முடியினை தடவியவாறே! நாம் ராஜகுட்டிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தையும் நமது பேமிலி டாக்டர் கிட்ட கொடுத்திடலாம். இதற்காக, இனி நீ அழக்கூடாது சரியா? என்று ஒரு தாயை போன்று கேட்டார்.
பருவதம் அம்மாள் தவறாக புரிந்து கொண்டாலும் அவரது உண்மையான தாய் உள்ளம் அவளை புல்லரிக்க செய்தது. தனக்கும் எது போன்ற தாய் இருந்து இருந்தால் இந்நேரம் இதேயே போன்ற குழந்தையுடன் ரிஷியுடன் வாழந்து இருப்பாள். ஆனால், அதற்கான கொடுப்பினை தனக்கு இல்லை என்பதை அவளது தாய் அவளுக்கு புரிய வைத்து விட்டாள். அதுவேயெ, ரிஷியை பிரியவும் காரணமாயிற்று.
தன் நினைவுகளில்மூழ்கி இருந்தவளை பருவதம் அம்மாள் குரல் கலைத்தது.
குழந்தைக்கு கொடுக்கும் பால் பவுடர் கொடும்மா.... நான் கலந்து எடுத்து வர சொல்கிறேன். குழந்தை முழிச்சு ரொம்ப நேரம் பசியோட இருக்க கூடாதம்மா...... என்று கீதாவிடம் கூறினார்.
கீதா தனது பையில் இருந்து பால் பவுடர் எடுத்து வந்து பருவதம் அம்மாளிடம் கொடுத்துவிட்டு, உங்க ராஜகுட்டிக்கு முழிச்சதும் பால் கொடுத்த குடிக்க ரொம்ப ஆடம்பிடிப்பாரு அதனால கொஞ்ச நேரம் கழிச்சு கொடுக்கலாம். என்று சிரித்தவரேயே குழந்தையை கொஞ்ச ஆரம்பித்தாள். குழந்தையும் அவளுடன் விளையாட ஆரம்பித்தது.
இவர்கள் இருவரின் சிரிப்பை பார்த்த பருவதம் அம்மாளும் கூட சேர்ந்து சிரித்தார். இதேயே போன்று அம்மாவும் பையனும் எப்பவும் சிரித்து கொண்டேயே இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டி கொண்டார்.
ப்ரியா, குழந்தை பெயர் என்னம்மா? நானும் ராஜகுட்டின்னு வேற கூப்பிட ஆரம்பிச்சுட்டேன். சொல்லுமா என் பேரன் பெயர் என்னம்மா? என்று ஆசையுடன் கேட்டார்.
கீதா, சிரித்து கொண்டயே! உங்க பேரனுக்கு அவங்க பாட்டிதான் பெயர் வைக்கனுன்னு ராஜகுட்டி அப்பா ஸ்ட்ரிக்ட்யா சொல்லிட்டார். அதனால, நீங்களேயே ஒருபெயர் வச்சுடுங்கம்மா சரியா? என்று கன்னக்குழி விழ சிறிது கொண்டேயே கேட்டாள்.
அவள் கூறியதை பருவதம் அம்மவாள் நம்பவேயே முடியவில்லை. என்றோ நான் கேட்டதை தன் மகன் இன்றும் ஞாபகம் வைத்து கூறியிருக்கிறான் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், என்று அந்த மகன் இல்லாது போனது அவர்க்கு அதிக வருத்தையும் சேர்த்து கொடுத்தது.
பருவதம்மாள், மௌனத்தை வைத்தெயே அவர்களது சிந்தனையை கீதா யூகித்து விட்டாள். ராஜசேகர் அனைத்தையும் அவளிடம் கூறி இருந்தான். அவர்களை, மேலும் வருந்தவிடாமல், என்னம்மா அதுக்குள்ள பெயர் யோசிக்க ஆரம்பிச்சுட்டீங்களா? என்று அவர்களது சிந்தனையை கலைத்தாள்.
பெயர் யோசிச்சதும் கண்டிப்பா சொல்றேன். முதல்ல, நீ பிரெஷ் ஆகிட்டு கிழ வந்து சாப்பிடு. அதுக்குள்ள, நான் ராஜகுட்டிக்கு பசிஅற்றிடுறேன். என்று குழந்தையை எடுத்து கொண்டு வெளியில் சென்றார்.
கீதா, அவர் பின்னேயே சென்று வேகமாக கதவை சாதி தாழிட்டாள். மறுபடியும் ரிஷி அறைக்குள் வர விடக்கூடாது. என்று முடிவு எடுத்தவள் வேகமாக, குளியலறைக்குள் சென்று பிரெஷ் ஆகி வெளியில் வந்தாள்.
அங்கே, பூட்டிய அறைக்குள் ரிஷி அவளை பார்த்து புன்னகைத்தவாறு உட்கார்ந்து இருந்தான். கீதாவிற்கு ஒன்றும் புரிய வில்லை. பூட்டிய அறைக்குள் இவன் எப்படி உள்ளே வந்தான். இப்போது என செய்ய போகிறானோ என்ற பயமும் அதிகரித்தது.
ரிஷி எழுந்து கீதாவின் அருகில் சென்றான். சீக்கிரம் போ ... உனக்காக பெரியம்மா சாப்பிடமா காத்திருக்காங்க என்று கூறிய அடுத்த நொடி கீதா வேகமாக கதவை திறக்க போனாள். ஒரு நிமிஷம், என்ற ரிஷியின் குரல் அவளை தடுத்தது.
சிரித்துகொண்டேயே அவள் அருகில் வந்தவன் அவள் நெற்றியில் கை வைத்து அவள் குங்குமம் வைத்து இருந்த இடத்தில் முத்தமிட்டான்.
அவள் என்றுமேயே தன்னுடையவள் என்பதை புரிந்தும் கொண்டான்.
தொடரும்
Go to Ennavale story main page
{kunena_discuss:1184}