(Reading time: 23 - 46 minutes)

முத்தம் கொடுக்க ஆரம்பித்தவன் "மீசை குத்துது", என்று அவள் சொன்ன பிறகே அவளை விட்டான். "மீசை எல்லாம் எடுக்க மாட்டேன் டி. எடுத்தா அசிங்கமா இருக்கும். என்ன செய்ய?", என்று அவளிடமே அபிப்பிராயம் கேட்டான்.

"கொஞ்ச நேரம் விட்டு விட்டு முத்தம் கொடுத்தா குத்தாது", என்று அவனுக்கு ஐடியா சொல்லி அடுத்த முத்தத்தை கொடுக்க வைத்தாள் மதி.

ன்னுடைய அறைக்கு சென்ற காவ்யாவோ தூக்கம் வராததால் தோட்டத்தில் நடக்கலாம் என்று வெளியே வந்தாள்.

அப்போது கேட் உள்ளே கார் வந்து நின்றது. "யாரா இருக்கும்?", என்று நினைத்து கொண்டு ஊன்றி பார்த்தாள் காவ்யா.

அப்போது அதில் இருந்து மோகனும், காயத்ரியும் இறங்கினார்கள். அவர்களை பார்த்த உடனே முக ஒற்றுமையை வைத்தே கண்டு பிடித்திருந்தாள் காவ்யா.

"இந்த ஷியாமுக்கு பிள்ளைங்க பொறந்தா கூட அவன் வாரிசுன்னு கண்டு பிடிச்சிரலாம் போல?", என்று உள்ளுக்குள் எண்ணி கொண்டு அவர்களை பார்த்து சினேகமாக சிரித்தாள்.

மோகனும் அவளை பார்த்து சிரித்தார். ஆனால் காயத்ரி பேருக்கு கூட சிரிக்க வில்லை. 

அதை குறித்து கொண்டாள் காவ்யா. "நீங்க தான் ஊர்ல இருந்து வந்துருக்குறதா மா? ஷியாம் சொன்னான்", என்றார் மோகன்.

"ஆமா அங்கிள்", என்று சிரித்தாள் காவ்யா.

"நான் யாருன்னு தெரியுதாம்மா?"

"தெரியுது அங்கிள். உள்ள வாங்க"

"ஷியாம் இருக்கானா மா?", என்று கேட்டு கொண்டே அவள் பின்னே சென்றார்.

"இப்ப தான் ரூமுக்கு போனாங்க. நீங்க போய் பாருங்க. நான் டீ கொண்டு வரேன்"

"அதெல்லாம் வேண்டாம் மா. எனக்கு டீ குடிக்கிற பழக்கம் இல்லை. அப்புறம் அவனை இங்க கூட்டிட்டு வரியா?"

"என்னது? நானா?"

"ஆமா, நாங்க போனா திட்டுவான்", என்று சொல்லி விட்டு அங்கு அமர்ந்து விட்டார். காயத்ரியும் முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்து விட்டாள்.

"இது என்ன கால கொடுமையா இருக்கு. சொந்தக்காரங்க இவங்க. இவங்க அவன் ரூம்க்கு போக மாட்டாங்களாம். மூணாவது மனுசி, நான் போகணுமாம். என்னையும் திட்டுவானோ?', என்று தடுமாற்றத்துடன் மேலே ஏறி சென்றாள் காவ்யா.

அப்போது தான் குளித்து முடித்து துண்டுடன் நின்று கொண்டிருந்தான் ஷியாம். மேலே பவுடரை தீட்டி கொண்டு ஒரு உள் பனியனை எடுத்தவன் தலை வழியாக அதை போட்டான். அப்போது தான் அவனுடைய அறைக்கதவின் குமிழ் மீது கை வைத்து திறந்தாள் காவ்யா. அது டொக் என்ற சத்தத்துடன் திறக்கவும் ஷியாமின் இடுப்பில் இருந்த துண்டு அவிழவும் சரியாக இருந்தது.

கண் முன்னே தெரிந்த காட்சியில் திக் பிரம்மை பிடித்த மாதிரி நின்று விட்டாள் காவ்யா. திரும்பி பார்த்த ஷியாமோ அதிர்ச்சியாகி துண்டை தேடி பிடித்து இடுப்பில் கட்டினான்.

அதன் பின்னர் தான் அவளை பார்த்தவன் மானம் கப்பல் ஏறிய கடுப்பில் "அறிவு இருக்கா? கதவை தட்டிட்டு வர மாட்டியா?", என்று கோபத்துடன் கேட்டான்.

அதில் சுயநினைவுக்கு வந்தவள், "ச்சி உவ்வே. கதவை பூட்டாம நீங்க இருந்துட்டு என்னை குறை சொல்றீங்களா?", என்று திருப்பி கேட்டாள்.

"என்னோட ரூம்க்கு நீ வருவேன்னு நான் கனவா கண்டேன்?", என்று முணுமுணுத்தான் ஷியாம்.

"இன்னைக்கு நேரமே சரி இல்லை. என் கண்ணுல ஆசிட் ஊத்தி தான் கழுவணும். சரி சரி உங்க அப்பாவும், தங்கச்சியும் வந்துருக்காங்க. சீக்கிரம் வாங்க", என்று சொல்லி விட்டு திரும்பியவள் மேலும் அதிர்ந்தாள். அவள் திரும்பிய போது கண்ணில் பட்ட சுவர் முழுவதும் அவளுடைய புகை படங்கள் வெவ்வேறு சைசில் ஓட்ட பட்டிருந்தது.

அதை பார்த்ததும் விதிர்த்து போனவள் மெதுவாக அந்த போட்டோ அருகில் நெருங்கினாள்.

அவள் போட்டோ பார்ப்பாள் என்று அவனே எதிர்பார்க்க வில்லை. அவனும் என்ன செய்ய என்று திகைத்து போனான். வெறித்த பார்வையோடு இருந்த அவளை நெருங்கியவன் அவளை சமாதான படுத்த வார்த்தைகளை தேடினான்.

ஒவ்வொன்றையும் பார்த்த காவ்யாவோ ஒரு முறைப்புடன் திரும்பி "என் போட்டோவை நீ எதுக்கு வச்சிருக்க? அதுவும் இத்தனை?", என்று கேட்டு கொண்டே அதை கிழிக்க போனாள்.

அவள் செயலை யூகித்தவன் "என்னுடைய மனசில் இருக்குற பொண்ணை நான் ஒட்டி வச்சிருக்கேன். உனக்கென்ன வந்தது?", என்று கேட்டு காதலையே அவளிடம் சொல்லி இருந்தான்.

அதில் திகைத்தவள் "யாரை கேட்டு என்னை லவ் பண்ண? என்னோட போட்டோ எல்லாம் இங்க இருக்க கூடாது", என்று சொல்லி மறுபடியும் கிழிக்க சென்றாள்.

அவள் கையை பிடித்து இழுத்தவன் "சும்மா இருன்னு சொன்னா கேக்க மாட்டியா? அந்த போட்டோ இங்க தான் இருக்கும். நீ தொட்டா உன்னை கொன்னுருவேன் பாத்துக்கோ", என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.