(Reading time: 23 - 46 minutes)

"நான் அதை கிழிக்காம விடமாட்டேன் ஷியாம்", என்று சண்டை கோழியாய் நின்றவளை ரசிக்க தான் தோன்றியது அவனுக்கு. அவளுடைய அருகாமையில் அவனே கொஞ்சம் தடுமாறி தான் போனான்.

"அப்பாடி, நீ என்னை பேர் சொல்லி கூப்பிடணும்னு எவ்வளவு நாள் ஆசை பட்டிருக்கேன் தெரியுமா? அப்புறம் என்ன சொன்ன ? என்னை பப்பி சேமா பாத்ததுக்கு கண்ணை ஆசிட் ஊத்தி கழுவ போறியா? இப்ப செய்ற விசயத்துல உன் வாயையும் சேத்து ஆசிட் ஊத்தி கழுவு" , என்று சொல்லி கொண்டே அவள் முகம் நோக்கி குனிந்தவன் அவளுடைய உதடுகளில் தன் உதட்டை பதித்தான்.

அதிர்ந்து போய் நின்றவள் அவனை தன்னிடம் இருந்து பிரிக்க முயன்றாள். அவனுடைய அழுத்தமான முத்தத்தில் சிறிது நேரத்திலே அவள் மறுப்பு நின்று விட்டது. நடந்து கொண்டிருந்த நிகழ்வில் அவளுடைய மூளையே வேலை நிறுத்தம் செய்தது போல இருந்தது. 

தன்னையே மறந்து நெகிழ்ந்து போனவள் அவனுடைய பனியனை இறுக்கி பிடித்தாள். அந்த செய்கையில் இப்போது ஷியாம் தன்னையே மறந்து ஒரு வேகத்துடன் அவளுடைய முகம் முழுவதும் முத்தத்தை பதித்தான்.

பின் அவளிடம் இருந்து விலகி அங்கிருந்த கட்டிலில் அவளை அமர வைத்தவன் "நீ என்னோட பொண்டாட்டி டி. என் பொண்டாட்டியோட போட்டோ என் ரூம்ல இல்லாம இருக்குமா? தேவை இல்லாம லூசு மாதிரி யோசிக்காத. இப்ப மாமா கொடுத்த முத்தத்தையே நினைச்சிட்டு இரு என்ன?", என்று சொல்லி விட்டு வெட்கமே இல்லாமல் அவள் முன்னாலே உடை மாற்றி கொண்டு கீழே சென்று விட்டான்.

அவன் சென்ற பின்னும் அவள் காதில் "நீ என் பொண்டாட்டி டி", என்ற வார்த்தையே கேட்டு கொண்டிருந்தது. இது வரை அறியாத ஒரு புது வித உணர்வை அவளுடைய உடலும் மனதும் உணர்ந்தது. அடி வயிற்றில் இருந்து ஒரு விதமான உணர்வு கிளம்பி அவளை இன்ப அவஸ்தைக்கு உள்ளாக்கியது.

இங்கு வந்தது முதல் அவனை பார்த்த, அவனுடன் பேசிய என்று அனைத்து தருணங்களும் இப்போது அவளுடைய மனதில் அணிவகுத்தது.

அவன் தன்னிடம் புன்னகையுடன் உரையாடியதுக்கு காரணம் அவன் என் மீது கொண்டுள்ள காதல் தானா என்று சிந்தித்து மனது. ஆனாலும் அவன் எப்படி இப்படி செய்யலாம் என்று ஒரு வித கோபமும் வந்தது.

அவன் தீண்டிய உதடுகளை வருடி பார்த்தாள். அதில் இன்னும் ஈரம் மிச்சம் இருந்தது.

"லூசு எப்படி எல்லாம் செய்றான்? கொஞ்சம் கூட அறிவே இல்லை. லூசு லூசு. இவனை எல்லாம் நான் ஒன்னும் லவ் பண்ண மாட்டேன்", என்று வாய் விட்டே புலம்பி கொண்டிருந்தாள்.

ஷியாம் கீழே போன போது சூர்யாவும், மதியும் மோகனிடம் பேசி கொண்டிருந்தார்கள். அவர்களை பார்த்து புன்னகைத்தவாறே இறங்கி சென்றான் ஷியாம் பிரகாஷ்.

புன்னகையுடன், புது பொலிவுடன் வரும் ஷியாமை பார்த்த மோகனின் கண்கள் நிறைந்து விட்டது. முதல் முறையாக தன் மகனை இப்படி ஒரு சந்தோசத்துடன் பார்த்திராத அவருக்கு கண்ணில் நீர் கோர்த்து விட்டது.

சூர்யாவும், மதியும் அர்த்தமுள்ள பார்வையை பரிமாறி கொண்டார்கள். ஆனால் அவர்களுக்கும் அவன் சந்தோசத்துக்கான காரணம் தெரியவில்லை.

"வாங்கப்பா, வா காயு", என்றான் ஷியாம்.

"ஷியாம்", என்று நா தழுதழுக்க அழைத்தார் மோகன். "என்ன பா கண் கலங்கிட்டு? இது என்னோட பிரண்ட் சூர்யா", என்றான் ஷியாம்.

"தெரியும் ஷியாம். இப்ப தான் பேசிட்டு இருந்தோம். அந்த பொண்ணு காவ்யா எங்க?", என்று கேட்டார் மோகன்.

"அவ என்னை கூப்பிட வந்து கதவுல இடிச்சிகிட்டா பா. மேல கொஞ்ச நேரம் உக்காந்திருன்னு சொல்லிட்டு வந்தேன்", என்று பொய் உரைத்தான் ஷியாம்.

"சரி ஷியாம். அப்புறம் காயத்ரி இங்க உனக்கு துணைக்கு ரெண்டு பிரண்ட்ஸ், ரெண்டு அண்ணன் இருக்காங்க. நீ சந்தோசமா இரு", என்றார் மோகன்.

அவரை முறைத்து விட்டு பதில் கூறாமல் அங்கிருந்த மற்றொரு அறைக்குள் சென்று மறைந்தாள் காயத்ரி.

கவலையுடன் அவனை பார்த்தார் மோகன். "ரெண்டு நாள்ல சரியாகிருவா பா. நீங்க எதாவது சாப்பிடுறீங்களா?", என்று கேட்டான் ஷியாம்.

"அதெல்லாம் வேண்டாம் ஷியாம். அவ மனசு மாறி உன் மேல அன்பா இருந்தாலே எனக்கு போதும். நான் ரெண்டு நாள் கழிச்சு வரேன். வரேன் பா சூர்யா. வரேன் மா மதி", என்று சொல்லி விட்டு சென்று விட்டார் மோகன்.

அப்போது தான் கீழே செல்லலாம் என்று எழுந்த காவ்யா அந்த போட்டோவை எல்லாம் ஏனோ கிழிக்க தோன்றாமலே கீழே வந்தாள்.

அவள் கீழே வந்ததும் அவள் அருகே ஓடி வந்த மதி "அடி பலமா டி? பாத்து நடக்க மாட்டியா? இப்படியா இடிச்சிக்குவ? தைலம் தேய்க்கவா?", என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.