ரச்னா கையை உதறி அவனின் பிடியில் இருந்த கரத்திற்கு விடுதலை கொடுத்தாள்...
அவர்கள் நடந்துக் கொண்டிருந்த இடத்தில் இருந்த வீட்டு வாசலில் அமர்ந்திருந்த பெரியவர்கள் சிலர் இவர்களை வேடிக்கை பார்த்தார்கள்...
“எல்லோரும் வேடிக்கை பார்க்குறாங்க... அங்கே மலை மேல போய் பேசலாம்...” என்றாள்..
“சரி ரச்னா... நீ என்ன சொன்னாலும் சரி...” என்றான் ஸ்ரேயான்ஷ்...
அதற்கு பின் இருவரும் பேசிக் கொள்ளாமல் கரடு முரடான ஒற்றை அடி பாதையிலும், பாதி வழியில் இருந்த சிதிலமடைந்த படிகளிலுமாக ஏறினார்கள்....
ஏற்கனவே இரண்டு முறை வந்திருந்த போதும், ரச்னாவிற்கு இப்போதும் அங்கே கொஞ்சிய இயற்கை எழில் மனதை மயக்குவதாகவே இருந்தது...!!!!
எல்லா பக்கமும் பச்சை பசலேன, மெல்லிய காற்றுடன், சூரியனின் ஒலியில் ஜகஜோதியாக ஒளிர்ந்த வ
...
This story is now available on Chillzee KiMo.
...
கு இன்னுமொரு ஐடியாவும் இருக்கு... நாம ஒரு குழந்தையை தத்தெடுத்துக்கலாம்...”
ரச்னா விழிகளை விரித்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்...
இந்த எண்ணம் அவளுள்ளும் கடந்த சில வருடங்களாகவே இருக்க தான் செய்தது... ஆனால் அத்தைக்கு அது பிடிக்காது என்ற எண்ணத்தில் அதி வெளியே சொல்லாமலே இருந்தாள்...