சீனி டப்பாவினுள் மாட்டிக் கொண்ட எறும்பாக தவித்தான் ஆதி. “பூமி ப்ளீஸ் இது வேண்டாமே. நீ நல்லா இருக்கணும்னு நினைக்கிறன் பூமி. இது நடந்தா அப்படி இருக்காதுடா, இப்போ எதோ ஒரு வேகத்தில் அப்படி தோணும், ஆனால் பின்னாளில் இதுவே பாரமா இருக்கும். அதனால் வேண்டாம் பூமி.” என்றான் வேதனையுடன்.
“நீங்க சொன்னபடி இது வேகத்தில் எடுத்த முடிவு தான். உங்களை ஆசிரமத்தில் பார்த்த மறுநாளே முடிவு செய்து விட்டேன். நீங்கள் தான் என் வாழ்க்கை துணை என்று. இந்த ஆறு மாத காலம் நீங்களாக என்னிடம் சொல்லத் தான் காத்திருந்தேன். அது நடப்பது போல் தெரியல. அதான் நானே ஆக்ஷனில் இறங்கி விட்டேன்.”
“நான் முடியாதுன்னு சொன்னா என்ன செய்வ பூமி?” என்றான் ஆதி.
“சிம்பிள், உங்களை கடத்திட்டுப் போய் கட்டாய கல்யாணம் தான்.” எனக் கூறி சிரித்தாள் பூமி.
“இந்த ஏழாவது ஜென்மத்திலும்ன்னு சொன்னியே பூமி, அப்போ கடந்த ஆறு ஜென்மமா நான் உன்னிடம் சிக்கி தவிக்கிறேனா? என்று புன்னகையுடன் ஆதி வினவ...
“அது தான் ஆறு ஜென்மமா பழகிடுச்சு தானே, அப்புறம் என்ன பிகு செய்து கொண்டு.....”
“நான் ஒப்புக் கொண்டாலும், உன் வீட்டில் சரி சொல்வார்களா பூமி?
“வாவ் நீங்களே சரி சொல்லிடீங்க. எங்கள் வீட்டில் சம்மதம் வாங்க வேண்டியது என் வேலை.”
“ஏய் நான் எப்போ சரி சொன்னேன்.”
“இப்போ தான், சொன்னீங்களே. எங்க வீட்டில் சம்மதம் வாங்கச் சொல்லி.”
ஆதியும் சிரித்துக் கொண்டே “உன்னிடம் பேசி ஜெயிக்கவே முடியாது.” எனக் கூறியபடி அவளை எழுப்பி அனைத்துக் கொண்டான்.
இது அனைத்தையும் உத்ராவிடம் சொல்லி முடித்திருந்தாள் பூமி. “உங்க வீட்டில் எல்லாம் ஓகேவா உத்ரா?
“ஆமா அக்கா உன் அளவுக்கு லேட் செய்யாமல் மூன்று மாதத்திலேயே எல்லாம் ஓகே ஆகி விட்டது என்று நினைக்கிறன். ஆனால்....”
“என்ன உத்ரா ஆனான்னு இழுக்கற?
“அதை பின்பு ஒரு நாள் சொல்றேன். எல்லோரும் வந்துட்டாங்க. பை பூமி” என்று கூறி இணைப்பை துண்டித்தாள் உத்ரா.
அடுத்த அத்தியாயத்துடன் நிறைவுப்பெறும்...
{kunena_discuss:1170}