(Reading time: 16 - 32 minutes)

அப்போ லலித்தா ஏப்பா இந்த தீரமிகுந்தன் பற்றி அமெரிக்க மேகசீனின்களில் நிறைய ஆர்டிகள் வந்திருக்கு என்று தனது மொபலில் கூகுலில் செர்ச் செய்து விடையை கூறினாள். இவன் பெரிய பிஸ்னஸ் மேனாம். மேலும் அமெரிக்காவின் பரம்பரையாக அயர்ன் ஓர் பிஸ்னெஸ் செய்யும் குடும்பத்தின் தற்போதைய எம்டி ப்ராங் என்பவரின் பேக்போன் இவன்தானாம். ஆனால் அந்த ப்ராங்கை விட இவனுக்குத்தான் பாதுகாப்பு அதிகமாம். ஏன்னா இவனின் பிஸ்னஸ் மூளைக்கு அங்கிருக்கும் மற்ற பிஸ்னஸ் மேனெல்லாம் பயப்படுறாங்களாம் எனறாள்.

அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்ட யாழிசைக்கு பயத்தில் இத்தனை செல்வாக்குள்ளவனை அடித்து வைத்திருக்கின்றேனே... போச்சு.... என்னைய ஏதாச்சும் பன்னிடபோகிறான்! என்று பயந்து வெளிறி உட்கார்ந்திருந்தாள்.

அப்பொழுது சந்தியா, யாழியின் அரண்ட முகத்தை பார்த்து தனது மற்ற தோழிகளை இப்போ எல்லோரும் வாயை மூடுங்கப்பா .இந்தமாதிரி ஆள்கள் எவ்வளவு திறமையானவங்களோ அவ்வளவு ஆபத்தானவங்களும் தான். என்ன! அவன் இருக்கிற உயரத்துக்கு நம்மளையெல்லாம் ஒரு கணக்காகவே நினைக்கமாட்டான் அதனால் நாம கொஞ்சம் அடக்கியே வாசிப்போம் என்றாள் .

அவள் அவ்வாறு கூறியதும், ஏய்! சந்தியா, எங்களை வேண்டுமானால் நீ சொல்வதைபோல் கணக்கில் எடுத்துக் கொள்ளமாட்டான் ஆனால் உன்னைப்போல மினிஸ்டரின் மகளையும், யாழிசையை போன்ற மிகஅழகான பெண்களையும் அவன்கணக்கில் எடுத்துகொள்வான் என்றே தோன்றுகிறது.

மேலும் நம்ம யாழி ஒருத்தனை உங்க வீட்டில் பார்த்து பயந்தேன் என்று கூறி அடையாளம் சொன்னாளே அந்த அடையாளம் எல்லாம் இந்த தீரமிகுந்தனுக்கு பக்காவா பொருத்தமா இருக்கு. ஏய் யாழி... உண்மையை சொல்லு... அவன் உன்னிடம் என்ன சொன்னான் நீ எதுக்கு பயந்து ஓடிவந்த என்று கேட்டாள்.

சந்தியாவும் அவள் என்னசொல்ல போகிறாளோ! என்று பயத்துடன் பார்க்க

யாழி பயத்துடன் கூறினாள், அவன் என்னை கீழேவிழாமல் பிடித்து பின் விடாமல்...என்று தயங்கி தயங்கி பின் கூறினாள், என்னை கிஸ் பண்ணிகிடுறேன் என்று முகம் கிட்ட வந்தானா... நான் அவனின் கன்னத்தில் அறைந்துட்டு ஓடி வந்துட்டேன்பா என்றாள்.

அவள் அவ்வாறு சொன்னதும் என்னது உன்னை கிஸ்பன்ணிகிறேன் என்றானா? என்று ஒருத்தியும். என்னது அவனை கன்னத்தில் அடிச்சுட்டீயா! என்று இன்னொருத்தியும் ஆச்சோ...! என்னடி இப்படி மாட்டிகிட்ட என்று ஒவ்வோருத்தியும் ஓவ்வோன்றாக பேசி அவளை கலவரப்படுத்தினர்.

அவள் கலவரமாவதை பார்த்த சந்தியா எல்லோரும் கொஞ்சம் சும்மா இருங்கப்பா என்றவள், யாழிசையிடம் ஏய்.. யாழி, நீ எதுக்கு இப்படி பயப்படுற. கிஸ் கேட்டா, அடிக்காம என்னசெய்வ? நான் என் அப்பாவிடம் சொல்லி அவனை நம் காலேஜ் பங்சனுக்கு வரவிடாமல் செய்துவிடுகிறேன் .கொஞ்ச நாள் எங்கயும் தனியா போகாதே அவன் இங்கயா இருக்க போறான். அவன் வந்த வேலை முடிஞ்சதும் அமெரிக்கா போயிடப்போறான். அதுவரை கொஞ்சம் ஜாக்கிறதையா இருந்துட்டா போதும், நீ பயப்படாத யாழி... என்றாள்.

தனது இருப்பிடத்திற்கு வந்த தீரன் தனது ஐ போனை வைத்துவிட்டு தனது பேக்கினுள் இருந்த பட்டன் போனை எடுத்து அதில் இமாமியை அழைத்தான்.

அவனின் ஐ போனில் அழைப்புகளை தன்னை உளவு பார்ப்பவர்கள் மொபைல் ஹகிங் செய்து அறிய வாய்ப்புள்ளதால் சீக்ரட்டாக அவன் இமாமியுடன் பேசுவதற்கென்று பட்டன்போனை பயன்படுத்த வைத்திருந்தான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

டச் கிரீன் போன் சந்தைக்கு வந்ததில் இருந்து, இருந்து மொபைல் ஹேக்கர்கள் தகவல் திருடுவது எளிதாகிவிட்டது. அதுவும் மொபைல் பீச்சர்ஸ் அட்வான்ஸ் ஆகஆக... அதில் ஹேகிங் பண்ணுவதும் சுலபமாக ஆகிவிட்டது. எனவே தற்போது பெரிய பெரிய பணக்காரர்கள் முன்பு வந்த நோக்கியா பட்டன் போன் மாடல்களுக்கே திரும்பிவிட்டனர். மேலும் பல நாடுகளில் ஆட்சியின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் பட்டன் போனை தவிர மற்ற போன்களை உபயோகிக்க கூடாது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

இமாமி தன்னுடைய பட்டன் போனிற்கு அழைப்பு வந்ததும் அது தனது பாஸ் தீரனுடையது என்றதால் தனியாக சென்று அதை அட்டன் செய்தான் .

அவர்களின் ஆங்கில உரையாடலை நாம் தமிழிலேயே பாப்போம். ஹாய் இம்மாமி நம் பிஸ்னஸ் எல்லாம் எப்படி போய்கொண்டிருக்கிறது என்று கேட்டான்.

பாஸ் நீங்க இல்லையென்ற குறைதவிர மத்தபடி அனைத்தும் நீங்க இருந்து செய்வதுபோல் உங்களின் அட்வைஸ் படி நன்றாகவே போய் கொண்டிருக்குது பாஸ் என்றான்.

ஓகே, இமாமி நீ என்ன செய்ற நம்ம டீமை வைத்து இங்க இந்தியாவில் எனக்கு தமிழ்நாட்டில் ஊட்டி சைடில் ஒரு சீக்ரட் தங்கும் இடமும் காரும் ஏற்பாடு செய்யவேண்டும். மேலும் இன்னும் இரு நாட்களில் அந்த இடத்திற்கு நம் டீமில் இருந்து ஒரு டென் கைசை அனுப்பி வை செக்யூடிட்டி பக்கவா இருக்கனும் ப்ராங் இதை ஸ்மல் செய்யாமல் வேலையை முடி. அப்படியே தமிழ்நாட்டு மினிஸ்டர் ரங்கராஜனின் மகள் பற்றிய பயோகிராபி பைலில் இருக்கும் அதை எடுத்து பார். அதில் அவரின் மகள் சந்தியா பற்றிய டீடைல்ஸ் இருக்கும் அந்த டீடைல்ஸ் வைத்து அவளில் வகுப்பில் யாழிசை என்ற ஒரு கிளாசிக் பியூட்டி படிக்கிறாள் அவளை பற்றிய டீடைல்ஸ் கலெக்ட் செய்து இன்னும் இரண்டு நாட்களில் இங்க வரும் நம் டீம் மேட்ஸ் என்னிடம் சம்மிட் செய்யணும் என்றதும்,

ஓ.கே பாஸ் சரியா எல்லாம் செய்து முடிச்சிட்டு உங்களை இந்த நம்பரில் தொடர்புகொள்கிறேன் என்றான் இமாமி . ஓகே பை இமாமி என்னிடம் தொடர்புகொள்ளும்போது நான் எடுக்காவிட்டாலும் மிஸ்ட் கால் பார்த்து உனக்கு இரவு இங்கு பத்துமணி இருக்கும்போது கால் பண்ணிடுவேன் பை இம்மாமி என்றவன் தொடர்பை துண்டித்தான்.

தொடரும்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:1212}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.