(Reading time: 10 - 19 minutes)

மாலை மூன்று மணியளவில் பாலமுருகனின் தொகுதியை அடைந்த சக்திவேல், கீர்த்தி சுரேஷுடன் ஏகப்பட்ட கடலைகளைப் போட்டுக் கொண்டிருந்தான்... இருவரையும் பார்க்க கூட்டம் அலைமோத ஆரம்பித்தது... ஒரு வழியாக நான்கு மணியளவில் தண்ணீர் தொட்டியை திறக்க அவன் அனுமயளிக்க அதன் பின்னர் நாலரை மணியளவில் பிரச்சாரம் ஆரம்பமாகியது....

“அன்பான வாக்காள பெருமக்களே உங்கள் தொகுதியின் வேட்பாளர் வண்டு முருகனை.....”

“அண்ணே பாலமுருகண்ணே.....”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“சரி சரி.... தொகுதி வேட்பாளர் பாலமுருகனைப்பற்றி நான் சொல்லுவதற்கு ஒன்றுமே இல்லை.... அவர் தொகுதிக்காக செய்த பல நல்ல செயல்களை இந்த நாடே அறியும்....”

“அவர் மூர்த்தி பெரிதென்றாலும் கீர்த்தி சிறிது....”

“அண்ணே அது மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது....”, பாலமுருகன் சக்திவேலை திருத்த பக்கத்தில் இருந்த சக்திவேலின் அல்லக்கை பாலமுருகனை ஐயோ பாவம் என்பது போல் பார்த்தான்....

அவனை என்ன என்பது போல் பாலமுருகன் பார்க்க... உன்னைய வச்சு செய்யப்போறார் பாரு என்று பதில் லுக்கை விட்டான் அல்லக்கை....

“மக்களே இவரின் பெருந்தன்மைக்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு.... இந்தத் தொகுதியில்  உள்ள உங்கள் அனைவருக்கும் வரும் பொங்கலுக்கு துணி எடுத்துத் தரப் போவதாக கூறியுள்ளார்.... தான் புதிது போடாவிட்டாலும் உழவர் திருநாள் அன்று தன் தொகுதி மக்கள் புத்தாடை அணிய வேண்டும் என்று நினைக்கும் இவரின் உயர்ந்த உள்ளத்திற்காகவே வரும் இடைத் தேர்தலில் இவருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.... நீங்கள் அனைவரும் எந்தக் கடையில் வேண்டுமானாலும் துணியை எடுத்துவிட்டு பில்லை இவருடைய அலுவலகத்திற்கு அனுப்பிவிடுங்கள்... அண்ணனே உங்கள் சார்பாக நீங்கள் வாங்கும் அனைத்து துணிகளுக்கும்  பணத்தை கட்டிவிடுவார்.... சூப்பர்ண்ணே.... சூப்பர்ண்ணே....”, தான் பேசியதை திருத்தினான் என்ற ஒரே காரணத்திற்காகவே பாலமுருகனின் தலையில் பெரிய ஆப்பாக இறக்கினான் சக்திவேல்....  

தொடரும்

Episode # 02

Go to Gayathri manthirathai story main page

{kunena_discuss:1216} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.