நான் வேணும்ன்னு கொட்டளை மாமா என்று பாவமாய் முழித்தாள் மஹி. மஹி பெரிய மாமா வராங்க வா ஓடிறலாம் என்று அணி மஹியை இழுத்து கொண்டு ஓடி விட்டாள்.
வாங்க மாப்பிள்ளை இப்போ தான் அப்பா கூப்பிட்டு சொன்னாங்க.உங்க பிரெண்ட்ஸ் இங்கயே வந்துடறாங்களாமே.கூப்பிட ஆள் அனுப்பிருப்பேனே இதுக்காக நீங்க வரணுமா என்றவர் அவனின் கோலத்தை பார்த்து முழித்தார்
.பின்னால் மஹியும் அணியும் சொல்லாதீங்க என்று சைகை காட்டினார்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
அன்பு மச்சினி ஆசை தங்கை சஹியின் உறவுகள் ஒரு கணம் யோசித்தவன் ஒன்னும் இல்லை மாமா ஷக்தி டிரைவ் பண்ணிட்டே கோக்கை கொட்டிட்டான் என்றான் சரண்.
அட துரோகி உன்னை என்று மனதிற்குள் சரவணனுக்கு அர்ச்சனை ஆரம்பித்தான் ஷக்தி.
அணி தப்பிச்சுட்டோம்.
ஆமா லூசு பெரிய மாமாக்கு தெரிஞ்சுருந்தா நம்ம கிளோஸ். நல்ல வேலை அண்ணன் நம்மளை காட்டி கொடுக்கலை. ரெம்ப ரெம்ப நல்ல அண்ணன்.
ஏன் உன்னையும் என்னையும் அப்பாட்ட போட்டு கொடுக்காததாலேயா
ஹோய் நீ தான கொட்டுன இப்போ என்னை ஏன் சேர்க்குற மக்கு மஹி.
அடி பாவி உன்மேல கொட்ட வேண்டியதை தான் நான் சரவணன் மாமா மேல கொட்டிட்டேன்.நீ தான் பொறுப்பு நீ தான் காரணம்
அட ச்சை நிப்பாட்டுங்க வழில நின்னு சண்டை போட்டுட்டு அங்கிட்டு போய் போடுங்க என்று வேலவன் விலகி விட்டு சென்றான்.
தொடரும்
{kunena_discuss:1208}