ஆண்டவா. தயவுசெய்து அவளை எனக்குக் காப்பாற்றிக் கொடுத்து விடு.
அவள் இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை.
அவளுக்கும், குழந்தைக்கும் எதுவும் ஆகக் கூடாது. குழந்தையைக் காண்பித்து தான் என் அம்மாவை சுயநினைவுக்குக் கொண்ட வர முடியும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்.
யுகாவை இழந்ததால் இப்படி ஆனவங்க அவன் திரும்பி வந்துவிட்டான் என்று தெரிந்தால் எழுந்து நடமாட ஆரம்பித்துவிடுவார்கள்.
மனம் முழுவதும் ‘கிருஷ்ணா! கிருஷ்ணா!’ என்ற புலம்பலுடன் மருத்துவமனைக்கு விரைந்தான்.
சாருலதா கொதிப்பின் உச்சத்தில் இருந்தாள்.
அவள் போட்ட திட்டத்தை எல்லாம் அந்த யுகேந்திரன் இறந்தும் தவிடு பொடியாக்கிவிட்டானே?
அவன் ஒழிந்தான் என்ற சந்தோசத்தில் இருந்தால் அந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் என்ன செய்யலாம்? என்று பரபரத்தாள். தன் தந்தையை அழைத்தாள்.
என்ன செய்ய வேண்டுமென்று சொன்னாள்.
அதன் படியே யுகேந்திரன் வந்தபோது அவனது பரிட்சையை பற்றி விசாரித்தாள்.
எப்படியும் அவன் நன்றாக எழுதியிருக்கமாட்டான்.
அவள் எதிர்பார்த்த மாதிரியே தான் அவனும் பதில் சொன்னான்.