அவனது உடலை எடுத்துக்கொண்டு சென்ற உடனும் வனிதாமணியின் கூடவே இருந்து அவர் மட்டும் அன்று யுகேந்திரனைத் தனியாய் விடாமல் கூடவே இருந்திருந்தால் அவனது தற்கொலையைத் தடுத்திருக்கலாம். அதனால் அவனது சாவுக்கு மறைமுகமாய் அவர்தான் காரணம் என்று அவர் மனதில் பதிய வைத்தாள்.
அவரும் அது உண்மைதானே? நான் என் மகனைத் தனியாய் விடாமல் கூடவே இருந்திருந்தால் என் மகன் இப்போது உயிரோடு இருந்திருப்பானே? என்று மனம் வெதும்பினார்.
கொஞ்சம் கொஞ்சமாக அவரையும் படுக்க வைத்துவிட்டாள்.
அதனால் கிருஷ்ணவேணி தன் அண்ணியாக வரவேண்டும் என்று யுகேந்திரன் ஆசைப்பட்டது மகேந்திரனுக்குத் தெரிய வராமலே போய்விட்டது.
ஆனால் அவள் எதிர்பாராதது மகேந்திரன் கிருஷ்ணவேணி மீது கோபப்பட்டு அவளை வீட்டை விட்டு அனுப்பாததுதான்.
அதோடு மட்டுமா?
...
This story is now available on Chillzee KiMo.
...
கிருஷ்ணவேணி ஆசைப்பட்டது போல் யுகேந்திரனே வந்து மகனாகப் பிறந்துவிட்டான் என்று அவனும் நம்பினான்.
“அப்பா. நம்ம யுகா நம்மை விட்டு எங்கும் போகலைப்பா. நம்மகிட்டயே திரும்பி வந்துட்டான். இந்தாங்கப்பா.”
மகனிடம் இருந்து பத்திரமாக குழந்தையை வாங்கியவர் சந்தோசம் தாளாமல் கண் கலங்கினார்.