“ஆமாம்பா. உன் அம்மா யுகாவிற்காக விடவேண்டிய கண்ணீரை எல்லாம் விட்டுவிட்டாள். இப்போது போய் அவன் தற்கொலை செய்துகொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டான். அதுவும் சொத்திற்காக என்று சொல்ல வேண்டுமா? இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறாள். அவளது நிம்மதியை மீண்டும் குலைக்க வேண்டுமா?”
அவன் யோசித்தான்.
“சரிப்பா. நீங்க சொல்றதும் சரியாதான் படுது.”
அன்றைய இரவு தன்னுடைய அறைக்கு வந்த மகன் மருமகளை கண் சிமிட்டாமல் பார்த்தார் வனிதாமணி.
மருமகளின் கண்களில் ஏக்கம் தெரிந்ததோ?
“கிருஷ்ணா.”
“அத்தை.”
அவரருகில் குனிந்து அவர் பேசுவரைக் கேட்க தயாராக நின்றாள்.
அவளைக் கண்டதும் அவர் மனம் குளிர்ந்தது.
எப்படியோ அவர்கள் தன்னுடைய இளைய மகனின் விருப்பத்தை இருவரும் நிறைவேற்றி இருக்கிறார்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்.
அவளால் நம்பவே முடியவில்லை.
இத்தனை நாட்களும் பக்கத்திலேயே வராமல் இருந்துவிட்டு இப்போது ஏன் இப்படி சிரிக்கிறான் என்று அவளுக்குப் புரியவில்லை.
“என்ன உன் அழகான தலைக்குள் இருந்து குடைந்துக்கிட்டிருக்கு. சொல்லிவிடேன்.”
சொல்வதற்காகத்தானே தவித்துக்கொண்டிருக்கிறாள்.