அவன் சொல்லச் சொல்ல அவனது அன்பில் நெக்குருகிப் போனவள் அவனை இறுக அணைத்துக்கொண்டாள்.
அவன் இதமாக அவளது உச்சந்தலையில் முத்தமிட்டான்.
அவளுக்கு சிலிர்த்தது.
அவனது காதல் பற்றி அறிந்ததும் உண்டான முதல் முத்தம். முன்பு கடமைக்காக செய்தான் என்று நினைத்தாள்.
“என்னோட காதல் பற்றி யுகாவிற்கு எப்படி தெரிந்தது?”
“எப்படியோ தெரிந்திருக்கு. அதுவும் அவன் உன்கிட்ட என்னை மணக்கச் சொல்லி கேட்ட அன்னிக்கு என்ன நடந்ததுன்னு எழுதி வைத்திருந்தான்.”
அவன் எடுத்துக் காண்பித்தான்.
“மக்கு கிருஷ்ணா. என் மக்கு கிருஷ்ணா. உனக்கு என்கிட்ட என்ன பயம்? எதற்கு அப்படி பார்த்தே? நான் உன்னை விரும்பறேன்னு நினைச்சுட்டியா? அதை தான் உன்கிட்டே சொல்லப் போறேன்னு நினைத்துதானே பயந்தே. என் அண்ணனைத் திருமணம் செய்து கொள்ள
...
This story is now available on Chillzee KiMo.
...
வள்தான் முக்கியக் குற்றவாளி.
அவளது பெற்றோரை சந்தித்த சாருமதி தங்கையின் இந்த நிலைமைக்குக் காரணம் அவர்களின் பேராசைதான் காரணம் என்று திட்டிவிட்டு அவர்களுடன் இருந்த உறவை முறித்துக்கொண்டு வந்துவிட்டாள்.
அதை எல்லாம் கேட்ட அவள் அதிர்ந்துபோய் அமர்ந்திருந்தாள்.
“பாவம் மதிக்கா.”