(Reading time: 23 - 46 minutes)

இந்நிலையில் தீரனின் என்கேஜ்மேண்டுக்கு வந்த பிராங் வகுலாவின் அழகை கண்டு ஆச்சரியமடைந்தான்.

அழகான எதையும் கண்டால் பிராங் ஆசைப்பட்டு அதனை தன்னுடையதாக ஆக்கநினைக்கும் குணத்தை அறிந்தவன்தான் தீரன். என்றபோதிலும் வகுலா ஒன்றும் பொருள் இல்லையே தான் ஆசையாக அவளை காதலிப்பது பிராங்கிற்கும் தெரியுமே தனக்கே பிராங் துரோகம் செய்ய மாட்டான் என தப்புகணக்கு போட்டான் தீரன்.

வகுலாவுக்கும் தன்மேல் காதல் உள்ளதால்தான் தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதித்தாள். அப்படிப்பட்ட வகுலாவை பிராங்கால் கவர்ந்து கொள்ளமுடியாது என்றும் இந்திய குடும்பத்தில் பிறந்த அவளும் இந்திய கலாச்சாரத்துடந்தான் இருப்பாள். தன்னை விரும்பும் அவளால் தன்னைவிட்டுச் செல்ல முடியாது என்ற நம்பிக்கையில் இருந்தான்.

நிச்சயதார்த்ததிற்கு வந்திருந்த பிராங்கினை கண்ட பட்டுமாமி அவனின் பார்வை ஆவலுடன் வகுலாவின் மீதுபடிவதை கண்டவள் யார் அந்த பையன் என்று விசாரித்தாள், அப்பொழுது அவனின் செல்வாக்கை கேள்விபட்டவள் நிகழ்ச்சிக்குப்பின் வகுலாவிடம் வந்து பிராங் மாதிரி பணக்கார பையனை உனக்கு பார்க்காமல் அந்த முரட்டுபையன் தீரனைதான் உனக்கு மாப்பிள்ளையாக உன் தகப்பனார் பார்க்கவேண்டுமா என்னமோ! போ... நான் வளர்த்து ஆளாகின பிள்ளை என்பதனால் என் ஆதங்கத்தை உன்னிடம் கொட்டிட்டேன் குழந்த அதை நீ பெரிசுபன்னாதே என்று கூறிச் சென்றாள்.

இந்நிலையில் தீரன் டெக் நியூ மாடல் மொமண்ட்ஸ் மற்றும் மொபல் வடிவமைபில் உதவுவதற்கென்று பிசியாக இருந்தான். தங்களின் கல்யாணத்திற்கு முன் அந்த ப்ராஜெக்ட்டை செய்து முடித்துக்கொடுத்தால் கல்யாணத்தின்போதும் அதன் பின்னும் வகுலாவுடன் நிறைய நேரம் செலவழிக்கலாம் என்றும் இந்த ப்ரோஜெட்டின் மூலம் கிடைக்கும் அதிகப்படியான லாபத்தை வகுலாவிற்காக செலவழிக்கலாம் என்பதால் அதில் பிசியாக இருந்துவிட்டான்.

எனவே வகுலா தீரனுடன் டைம் செலவழிக்க அழைத்த போதெல்லாம் தீரனால் அவளுடன் செல்லமுடியவில்லை. அதனை கண்ட பிராங் வகுலாவை தற்செயலாக வெளியில் சந்திப்பதுபோல் பிளான் செய்து சந்தித்து அவளுடன் தீரனின் நண்பன் என்று கூறி அறிமுகமானான்.

ஏற்கனவே அவனை தங்களின் நிச்சயதார்த்தத்தில் பார்த்ததாலேயும். மேலும் அவனின் செல்வவளத்தையும் மீடியாவில் பிஸ்னஸ் மேகசீனில் அவனின் போட்டோஸ் வெளிவருவதையும் கண்டு இருந்த வகுலா அவனின் செல்வவளத்தையும் கேட்டு பிரமித்து இருந்தாள்.

தீரன் பிராங்கின் நண்பன் என்று தனது தோழிகளிடம் கூறுவதையே பெருமையாக நினைத்த வகுலா, பிராங்கே அவளுடன் பேச முன்வந்ததை கண்டு கிருகிருத்துப்போனாள் எனவே அவனுடன் அவளும் ஆசையாக பழக ஆரம்பித்தாள்.

பிராங்கை தான் முதலில் சந்தித்த விஷயத்தை அவள் தீரனிடம் கூறினாள். அவள் கூறியதைகேட்ட தீரன், பிராங் என்னுடைய நண்பன்தான் என்றாலும் வெளியிடங்களில் அவனை சந்திக்க நேரிட்டால் ஒரு ஹாயுடன் அவனைவிட்டு விலகிச் சென்றுவிடுமாறும் பெண்கள் விசயத்தில் அவன் உத்தமனாக இருக்கமாட்டன் என்று கூறி கண்டித்தான்.

அதை கேட்ட வகுலா, தீரனுக்கு பிராங்கின் மேல் பொறாமை மற்றும் தன் மேல் உள்ள பொசசிவ்வினால்தான் அவ்வாறு கோபப்படுகிறான் என்று நினைத்தாள். அதன்பின் பிராங்குடன் அவளின் சந்திப்பை தீரனிடம் சொல்லாமல் மறைத்து பிராங்குடன் பழக ஆரம்பித்துவிட்டாள்.

இந்நிலையில் தீரனுக்கு தான் மேற்கொண்ட டெக் நியூ போன் ப்ராஜெக்ட் சிறப்பாக செய்துமுடித்ததால் கிடைத்த பணத்தாலும் பாராட்டாலும் சந்தோசமடைந்தான். தீரன் அதை வகுலாவுடன் கொண்டாட நினைத்தான் அதற்குமுன் பத்மினியிடம் தனது வெற்றியை கூறி ஆசிபெற வீட்டிற்கு வந்தான்.

ஆடிடோரியத்தில் ஒரு கலைநிகழ்ச்சிக்காக படையப்பா படத்தில் வரும் மின்சார பூவே என்ற பாடலுக்கு ரம்யாகிருஷ்ணன் ரோலில் நடனமாட வகுலாவும் அவளுடன் ஜென்ஸ் வாய்சுக்கு வேறு ஒருபெண் ஆணின் கேரக்டரில் பரதத்தை அவளுடன் ஜோடியாக ஆட ஒத்திகை பார்த்துகொண்டிருந்தனர்.

வாசலில் வகுலாவின் வாகனம் நிற்பதை கண்ட தீரன் அவள் லாபியில் இருக்கிறாள் என்பதை உணர்ந்துகொண்டான் எனவே அவளை காணும் ஆர்வத்தில் உள்ளே நுழைந்தான்.

தங்களது குரூ பத்மினியின் மகன் தீரனின் பியான்ஷி வகுலா என்பதை பரவலாக அறிந்திருந்தனர். அங்கு பயிலும் மாணவர்கள் இந்நிலையில் தீரன் மற்றவர்களை வகுலா அறியாமல் வெளியேறச்சொல்லி கேட்டுகொண்டான் .

மேலும் தான் அவளுக்கு சர்ப்பிரைசாக நடனம் ஆடி காண்பித்து அவளுடன் தனக்கு ஏற்பட்ட ஊடலை போக்க உதவுமாறு கேட்டுகொண்டான்.

மற்றவர்கள் சென்றதும் பாட்டை ஒலிக்கவிட்டான் தீரன். பாடலில் ஒலியில் திரும்பி ஆடிட்டோரியத்தை பார்த்த வகுலா அங்கு தீரனைகண்டதும் தன்னை அவன் தவிர்த்துவிட்டதால் தான் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை என்று மனதினுள் நினைத்தபடி அவளை பார்த்துவிட்டு அசால்டாக திரும்பிகொண்டாள்.

அவள் கூப்பிடும்போது தான் அவளுடன் வெளியில் செல்லாத கோபத்தில்தான் இவ்வாறு நடந்துகொள்கிறாள் என்று நினைத்த தீரன் அவளை நடனமாடி இம்ப்ரஸ் செய்யநினைத்தவன் பாடலை ஒருதடவை கிரகித்து பின் ஓடவிட்டு அபிநயம் பிடிக்க ஆரம்பித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.