அந்த பெரிய பறந்த ஆடிட்டோரியத்தில் யாரும் இல்லா தனிமையில் காதில் ஒலித்த அந்த பாடல் அதில் லிரிக்சை அனுபவித்து உச்சரித்தபடி அழகே உருவான வகுலமாலியின் அழகை ரசித்தபடியே தான் வளரும் போதிலிருந்து கண்ட அனுபவித்த பரதநாட்டிய அசைவுகளை ஆரம்பித்தான் அதில் வகுலாவின் மீது உள்ள மயக்கத்தையும் கிறக்கத்தையும் பாடலின் வரிகளுக்கு தக்க நாட்டியமாக தொடுத்து வழிய விட்டுகொண்டிருந்தான்.
“மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்”
{தீரனின் அசைவினில் நடன லயத்தினில் விழிகளில் வழிந்த அழைப்பினில் பெருமிதமான சிரிப்பினில் சற்று தடுமாறிய வகுலா தனது காலில் சலங்கையை பூட்ட ஆரம்பித்தபடி அவனின் அழகான நடனத்தை வியந்து பார்த்தாள்}
“மாலையில் பொன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில் நான் வெயில் காய வேண்டும்
சகியே சகியே சகியே
என் மீசைக்கும் ஆசைக்கும் பூசைக்கும் நீ வேண்டும் “,
[என்று அழைப்பு விடுத்தான் அவளுக்கு] அவளும் சலங்கையை கட்டிமுடித்து தாளலயத்துடன் இணைந்தது அவனுடன் ஆடத்துவங்கினாள்
மின்சாரா கண்ணா
மின்சாரா கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய்
கூந்தலில் விழும் பூக்களை நீ மடியேந்த வேண்டும்
நான் விடும் பெருமூச்சிலே நீ குளிர் காய வேண்டும்
{என்று இரண்டுபேரும் நடன அசைவுகளை உடல் உரச உள்ளம் தீமூட்ட நடனத்தில் லயித்து ஆடிக்கொண்டிருந்தனர்}
மதனா மதனா மதனா
என் பூவுக்கும் தேவைக்கும் சேவைக்கும் நீ வேண்டும்
மின்சாரா கண்ணா.......
{என்ற வரிகள் வரும் போது உள்ளே நுழைந்த இமாமி ஸ்டேஜில் ஏறி பாஸ் என்று கையை ஆட்டி சத்தமாக தீரனை அழைத்தான்.}
இமாமி கூப்பிட்டதும் தீரன் சட்டென்று தன்னிலைக்கு வந்தவன் தன்னுடன் இணைந்து குலைந்து ஆடிக்கொண்டிருந்த வகுலாவின் காதில் ஒன்செகன்ட் பேபி என்று கூறி ஸ்டேஜின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த இமாமியிடம் வந்தான்.
வகுலாவிர்க்கு தனது கட்டுக்குள் இருந்து தீரன் அவ்வளவு சீக்கிரம் விடுபட்டு இமாமியிடம் போனது எரிச்சலை தந்தது, அவனை எரித்துவிடும்படி பார்வை பார்த்தவள். டக்கென்று அடுத்து வந்த பாடல் வரிகளுக்கு ஏற்றாற்போல் தள்ளி நின்று இமாமி மொபைலில் எதையோ காண்பிப்பதை பார்த்துகொண்டிருந்த தீரனை நோக்கி அசைவுகளை கொடுத்தவண்ணம் நிற்காமல் ஆட்டத்தை தொடர்ந்தாள்.
“ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளிகொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்
ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளிகொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்
என் ஆடை தாங்கிக்கொள்ள என் கூந்தல் ஏந்திக்கொள்ள
உனக்கொரு வாய்ப்பல்லவா...
நான் உண்ட மிச்சபாலை நீ உண்டு வாழ்ந்து வந்தால்
மோட்சங்கள் உனக்கல்லவா
வானம் வந்து வளைகிறதே வணங்கிட வா
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்”
என்று நடன அசைவுகளிலேயே தனக்கு அடிமை கணவனாக தீரனை வரச்சொல்லி அழைப்பு விடுத்தாள்.
இமாமி காண்பித்ததை பார்த்தவன் கண்கள் கோபத்தாலோ ஏமாற்றதாலோ துரோகத்தாலோ சிவந்தது அவ்வளவு நேரம் ரசித்து பார்த்து தொட்டு இணைந்து ஆடிக்கொண்டு இருந்த அவனின் மோகம் அறுபட்டு குரோதமாய் வகுலாவை பார்த்தான் பின் ஆத்திரத்துடன் குதித்து அவளின் முன்வந்தவன் பாடலின் வரிகலுக்கு ஏற்ப வகுலாவின் முன் ருத்திர தாண்டவம் ஆடினான்