சிரிக்கவே தெரியாத ஒருவனுடன் எப்படி வாழ முடியும்?
எந்நேரமும் இயந்திரம் மாதிரி உழைத்துக்கொண்டேவா இருக்க முடியும்?
அதற்குப் பேசாமல் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்துவிடலாம் என்று நினைத்திருந்தாள்.
திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று அடிக்கடி தாயிடமும் புலம்பியிருக்கிறாள்.
அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருந்தால்தானே அது அவளது மனதில் பதியும். அதன் பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்த மாட்டாள்.
தந்தை ஏற்பாடு செய்தாலும் அதை தடுத்து நிறுத்துவாள். என்று அறியாப்பிள்ளையாக யோசித்தாள்.
திருமணம் வேண்டாமென்று மகள் விளையாட்டிற்கு சொல்லவில்லை என்று தெரிந்ததுமே சீதாலெட்சுமி விழித்துக்கொண்டாள்.
என்ன காரணத்தினால் திருமணம் வேண்டாம் என்று மகள் மறுக்கிறாள் என்று கேட்டாள்.<
...
This story is now available on Chillzee KiMo.
...
்விட்டுக் கேட்கவும் பயம்.
திருமணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டு இப்போது அலைகிறாற் போன்று காட்டிக்கொள்ளக்கூடாது என்று அமைதியாக இருந்தாள்.
என்ன இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடப்போகிறான். அப்போது பார்த்தால் ஆயிற்று.
அவன் எப்படியிருப்பானோ?
என்று மனம் அலைபாய்ந்தது.