தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு

சிவரஞ்சனிக்கு உறக்கமே வரவில்லை.
புரண்டு புரண்டு படுத்தாள்.
அவளது செயல் மனோரஞ்சனிக்கு ஆச்சர்யமாக இருந்தது.
எப்போதும் படுத்ததுமே உறங்கிவிடுபவள் சிவரஞ்சனி.
அவளது அந்த செயலால் அதிகம் பாதிக்கப்பட்டவளும் அவள்தான்.
உறங்கும்போது இருவரும் ஒரே அறையில் தான் படுப்பார்கள்.
அப்போது இரவு நேரத்தில் ஏதாவது பேச ஆரம்பித்து வளவளத்துக்கொண்டேதான் தூங்க ஆரம்பிப்பர்.
சிறிது நேரத்திற்கெல்லாம் தனது தமக்கை உறங்க ஆரம்பித்துவிட்டாள் என்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
் நடந்து கொண்டதே மனக்கண்ணில் வந்து நின்றது.
அவனுடைய நிச்சயதார்த்தத்திற்கு வந்த மாதிரியே அவன் நடந்துகொள்ளவில்லை.
அவ்வப்போது நிமிர்ந்து அவன் முகத்தில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா? என்று பார்க்கத்தான் செய்தாள்.
ஆனால் அவள் எதிர்பார்த்த மாதிரி அங்கே எந்த மாற்றமும் தெரியவில்லை.