மகள் சின்னப் பெண். அனுபவம் இல்லாமல் பேசிவிட்டாள். பாவம் அந்த வசந்தா. அவள் என்ன செய்வாள்?
அவளது சோகங்களை பகிர்ந்து கொள்ள ஆளில்லாமல் தவிக்கிறாள்.
ஒரு பெண்ணாக, பெண்ணைப் பெற்ற தாயாக அவளால் வசந்தாவின் சிரமத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதை அவளது வீட்டினர் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். அப்படியே புரிந்து கொண்டாலும் அவளைக் காப்பாற்றும் கடமை தங்களுக்கு வந்துவிடுமே என்ற பயம் வேறு. அவர்களைக் குற்றம் சொல்லியும் பயனில்லை. அவர்களுக்கு வசந்தா மட்டுமே பெண்ணாக இருந்தால் அப்படி தாங்கத் தயாராகத்தான் இருப்பார்கள்.
அவளுக்கு அடுத்து தம்பி தங்கைகள் என்று இருக்கும்போது என்ன செய்ய முடியும்?
அதனால்தான் அவள் சிவரஞ்சனியைத் தேடி வரும்போது சீதாலெட்சுமியால் எதுவும் சொல்ல முடியவில்லை.
வசந்தாவிற்கும் இங்கே
...
This story is now available on Chillzee KiMo.
...
்.
அவளது குறை எல்லாம் தனக்கு கணவனாக வரப்போகிறவன் மீதே.
அவளது அன்னை வசந்தாவிற்காக சில நேரங்களில் ஒரு பழமொழி சொல்வதுண்டு.
“கொண்டவன் துணையிருந்தால் கூரையேறி சண்டை போடலாம்.” என்று சொல்வாள்.
வசந்தாவின் கணவன் சரியில்லாததால்தான் அவளுக்கு இத்தனை துன்பமே என்று சொல்வாள்.