“ஏய்! சிவா. வாடீ போகலாம்.”
அவளது தோழிகளில் ஒருத்தி கத்திக் கூப்பிட்டாள்.
எங்கே? அவன் வழிவிட்டால் அல்லவா போவதற்கு?
அவள் அவனைப் பார்க்க அவன் தன் கண்களை சிமிட்டினான்.
அவள் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றாள். இதுவரைக்கும் இத்தனை அருகில் ஒரு அந்நிய ஆடவனுடன் அவள் நின்றதே இல்லை. அதற்கான வாய்ப்பு அவளுக்கு வாய்த்ததும் இல்லை.
அவன் வழிவிட்டு ஒதுங்க அவள் ஓட்டமாய் தனது தோழிகளை நெருங்கினாள்.
இன்னும் தன்னைப் பார்க்கிறானா? அவன் ஏன் அப்படி செய்தான்? மனம் குறுகுறுத்தது.
அவளையும் அறியாமல் திரும்பிப்பார்த்தாள்.
அவன் அவளையேதான் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவள் வாய் ‘பொறுக்கி’ என்று முணுமுணுத்தது.
அது புரிந்தாற் போன்று அவன் முகம் மாறியது.
ஒரு வேளை பின்னே
...
This story is now available on Chillzee KiMo.
...
ation: underline;">Go to Neeyirunthaal naaniruppen story main page
{kunena_discuss:1222}