நேரிடையாக பார்க்கவும் ஒரு மாதிரியாக இருந்தது. யாராவது பார்த்துவிட்டு கிண்டல் செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் ஓரக்கண்ணால் பார்க்கத்தான் செய்தாள். அதுவும் அவளை யாரோ குறுகுறுவென்று பார்க்கிற மாதிரி ஒரு உணர்வு தோன்றியதும் அவன்தான் தன்னைப் பார்க்கிறானோ? என்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவனிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை என்றதும் தன் உள்ளுணர்வு அதீத கற்பனை செய்து கொள்வதாக மானசீகமாக தன்னையே திட்டிக்கொண்டாள்.
இப்போது கொஞ்ச நாட்களாக படிக்க ஆரம்பித்திருந்த காதல் கதைகள் அவளை அப்படி நினைக்க வைத்தனவோ என்று நினைத்தாள்.
அப்படிப்பட்ட கதைகளை படிக்காமல் இருந்திருந்தால் இப்போது இத்தனை மனவருத்தம் இருந்திருக்காதோ?
அதில் வரும் நாயகன் நாயகியின் காதல் காட்சிகளை எல்லாம் படித்துவிட்டு அதிகமாய் எதிர்பார்த்துவி
...
This story is now available on Chillzee KiMo.
...
மனம் புகைந்தது.
கட்டிக்கப்போறவளுக்கு தெரியவில்லை. அவளது தங்கைக்கு தெரிந்திருக்கிறது.
“ஆமா. நம்மகிட்ட யார் சொல்லப் போறா? அம்மாதான் உன் தோழி வசந்தாவோட அம்மாகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நான் வாய் பார்த்துக்கிட்டே நின்னேன்னா. அதற்கு எனக்கு முதுகில் இரண்டு மொத்தும் கிடைத்தது.”