மற்ற நேரமானால் அதைக் கேட்டுவிட்டு சிரித்திருப்பாள். இப்போது முடியவில்லை.
“அப்பா உனக்கு ஏற்ற மாப்பிள்ளை பார்த்திருக்கிறார். இதே மாதிரி எனக்கும் பார்ப்பாரா?”
“அலையாதடி. வேணும்னா இந்த மாப்பிள்ளையை நீயே கட்டிக்கோ.”
“அது முடியாதேக்கா. எனக்கு இன்னும் கல்யாண வயசு வரலையே. மாம்ஸ் கொஞ்சம் அவசரப்பட்டுட்டாரு. இன்னும் கொஞ்ச வருசம் காத்திருந்தால் நானே அவரை கல்யாணம் செய்து கொண்டிருப்பேன். என்ன கொஞ்சம் அன்னாந்து பார்த்து பேசனும்.”
அவள் பாட்டுக்கும் சொல்லிக்கொண்டே போனாள்.
‘ஆமா. உயரம்.’
அந்த மாப்பிள்ளையின் உயரமும் அவளுக்கு இடித்தது.
அவன் நிச்சயதார்த்தம் முடிந்து செல்லும்போது அவனது உயரத்தைப் பார்த்தாள்.
அவளது தங்கைக்கு வேண்டுமானால் அவன் உயரமானவனாகத் தெரியலாம்.
ஆனா
...
This story is now available on Chillzee KiMo.
...
ரும்பவும் வந்து குழப்பி விடப்போகுது பாரேன்.”
மனோரஞ்சனி குற்றம் சாட்டினாள்.
“ஸ். அப்படி எல்லாம் சொல்லக் கூடாது மனோ. அவதான் சொன்னான்னா உன் அக்காவுக்கு புத்தி புல் மேய போயிடுச்சா?”
அதில் இருந்த உண்மையை உணர்ந்தாலும் சீதாலெட்சுமியால் அவளை மாதிரி பட்டென்று சொல்ல முடியவில்லை.