புகுந்த வீட்டில் அத்தனை உறவுகளும் நன்றாக இருந்து கணவன் மட்டும் சரியில்லை என்றால் அந்த வாழ்க்கை வீண்தானே?
தனது சோகத்தை விட்டுவிட்டுத் தோழியைக் கவனித்தாள்.
சீதாலெட்சுமி இரண்டு பேருக்கும் காபியை பின்பக்கமே கொண்டு வந்துவிட்டார்.
“ஏன்மா இங்கேயே கொண்டு வந்துட்டீங்க.”
“நீங்க கதையளந்துட்டு வர்றதுக்குள்ளே ஆறிடும். அதான் எடுத்துட்டு வந்தேன். சாப்பாடும் தயாரா இருக்கு. பேசிட்டு சாப்பிட வாங்க.”
சீதாலெட்சுமியின் மனம் முழுவதும் வசந்தாவைப் பற்றியே இருந்தது.
அவளது மாமியார் திருமணம் நிச்சயமான பிறகு மருமகளைப் பார்க்க வரும்போதெல்லாம் வசந்தாவை அழைத்த முறை குறித்து அப்போதே சந்தேகம் எழுந்தது அவளுக்கு.
வசந்தாவின் மாமியார் அவளை வாங்க போங்க என்றுதான் அழைத்தாள்.
கண்டிப்பாய் ஒரு ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பிடவே முடியலை.”
அவள் பாட்டிற்கும் எதார்த்தமாய் பேசிவிட்டு அடுத்த விள்ளலை எடுத்து வாயில் வைத்தாள்.
சகோதரிகள் இருவரும் திகைத்து நின்றனர்.
சீதாலெட்சுமியோ மகள்களுக்குக் கூட காட்டாமல் தன் கண்ணீரைத் துடைத்தாள்.
இதை விட வசந்தா கஷ்டப்படுவதை எப்படி சொல்லிவிட முடியும்?