என்று பேசிகொண்டே இருவரும் கிளம்பி மருத்துவமனையை அடைந்தனர். பின் ஜானகி தர்மலிங்கத்துடன் கொஞ்ச நேரம் பேசி கொண்டிருந்து விட்டு சுசிலா அன்று பிசியாக இருந்ததால் பாரதி சம்மதித்து விட்டாள் என்று போனில் சுருக்கமாக சொல்லி விட்டு பிறகு பேசலாம் என்று வீட்டிற்கு திரும்பினார்..
ஜானகி சென்றதும் பாரதிக்கு என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது..
“ஏதோ ஒரு வேகத்தில் நான் பாட்டுக்கு சரி னு சொல்லிட்டேனோ?? நான் எடுத்த முடிவு சரியா??? “ என்று தன்னைதானே கேட்டு கொண்டாள்..
பின் அவள் வீட்டில் இருந்து போன் வரவும் தன் குழப்பத்தை மறைத்து கொண்டு அனைவரிடமும் பேசினாள்.. பின் அலைபேசியை தன் அப்பாவிடம் கொடுத்தாள்.. எல்லாரும் அவரிடம் நலம் விசாரித்து விட்டு சீக்கிரம் அவர்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
வர சொன்னீங்களா?? "
"உனக்கு அறிவு இருக்கா பாரதி.. ஜானகி தான் வயசான காலத்துல ஏதோ உளறிக்கிட்டு இருக்கானா நீயும் அதுக்கு சம்மதம் னு சொன்னியாமில்லை.. உனக்கு என்ன பைத்தியமா??? " என்று கோபமாக கத்தினார் சுசிலா
"இல்லை டாக்டர்.. எனக்கு பிடிச்சுதான் சம்மதம் சொன்னேன்" என்று இழுத்தாள்