நீ கொஞ்சம் உன் பிடிவாதத்தை விட்டு கொடுடா... உனக்காக இல்லைனாலும் ஜானகிக்காகவாது இதுக்கு ஒத்துக்கோ.. “ என்று சமாதானம் செய்ய முயன்றார்...
அதை கேட்டதும் கொஞ்சம் இளகியவன்
“ஆமா அந்த பொண்ணு எப்படி கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு குழந்தையை சுமக்க ஒத்துகிட்டா??? இது அவள் எதிர்காலத்தை பாதிக்காதா ??? “ என்று தன் மனதை உறுத்தி கொண்டிருந்ததை கேட்டான்.
அதை கேட்டதும் சுசிலாவின் உள்ளம் குளிர்ந்து போனது..
“தன்னை மாதிரியே அந்த பொண்ணுக்காக பார்க்கிறானே.. நான் வளர்த்த பையன் அல்லவா ” என்று பூரித்து போனார்..
“ஹ்ம்ம்ம் நீ சொல்றது சரிதான் கண்ணா... நானும் அந்த பொண்ணுகிட்ட சொல்லி பார்த்துட்டேன்.. ஆனால் அவளும் கேட்க மாட்டேங்குறா… “
“என்னது??? அந்த பொண்ணுகிட்ட பேசுனீங்களா??? இதை வேண்டாம்னு சொன்னீங்
...
This story is now available on Chillzee KiMo.
...
தது... அந்த முருகனுக்கு மனதார நன்றி சொன்னார்...
அதற்கப்புறம் கடகடவென திட்டமிட்டனர்
அதன்படி பாரதி குழந்தையை சுமக்கும் பத்து மாதம் சென்னையிலயே தங்கியிருக்க வேண்டும். அதுவும் அவள் குடும்பம் கண்ணில் படாமல்.. என்ன செய்வது என்று யோசித்த பொழுதுதான் அந்த சிங்கப்பூர் ஐடியா தோன்றியது..