அவள் பேசி முடித்ததும் இன்னும் அலைபேசியை தராமல் யோசித்துக்கொண்டு நிற்கவும்
“என்ன இந்த மாதிரி போனை முன்ன பின்ன பார்த்தது இல்லையா?? அதையே உத்து பார்த்து கிட்டிருக்க??? சீக்கிரம் கொடு. எனக்கு வேலை இருக்கு” என்று கத்தினான்
அதை கேட்டு சுய நினைவுக்கு வந்தவள் அதை வேகமாக அவனிடம் கொடுத்தாள்..
அலைபேசியை கொடுக்கும் பொழுதுதான் கவனித்தாள் அந்த கவர் போட்டொ.. அதில் ஆதித்யா, ஜானகி, ராம் மற்றும் சுசிலா நால்வரும் சிரித்து கொண்டிருந்தனர்....
“பரவாலை.. இந்த சிடுமூஞ்சிக்கு சிரிக்க கூட தெரிஞ்சிருக்கு” என்று மனதிற்குள் திட்டிக்கொண்டெ அதை கொடுத்தாள்.. அவனும் முறைத்தபடியே அதை வாங்கியவன்
“சீக்கிரம் ஏதாவது செய்...பசி உயிர் போகுது “ என்று மீண்டும் திட்டியவாறு வெளியில் சென்றான்...
“நான் என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
்று உள்ளே சென்றாள்...
ஜானகி எப்பொழுதும் முதலிலயே செய்து வைத்து விடுவார்.. இல்லை ஜானகி செய்யாத நாட்களில் சமையல் செய்யும் தங்கம் செய்தாலும் முன்னாடியே எல்லா தோசையையும் செய்து ஹாட் பாக்ஷில் போட்டு வைத்து விடுவாள்.. ஆதி எப்பவும் மூன்று தோசை மட்டும் எடுத்து சாப்பிட்டு எழுந்து விடுவான்...