பாரதி வைத்திருந்த அந்த தோசையும் வெங்காய சட்னி மற்றும் தேங்காய் சட்னியை யும் பார்த்தவன் முதலில் யோசித்து கொஞ்சமாக தொட்டு சாப்பிட்டான்... அந்த வெங்காய சட்னியின் சுவை புதியதாக இருக்கவும் விரும்பி சாப்பிட ஆரம்பித்தான்...
ஏற்கனவே பசியில் இருந்தவனுக்கு அந்த ரெண்டு சட்னியின் காம்பினேஷ்ன் சூப்பராக இருக்கவும் ருசித்து சாப்பிட்டான் .. பாரதியும் ஒவ்வொன்றாக சுட்டு எடுத்து வரவும் அவனும் தன் அலைபேசியை பார்த்துக்கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தான்..
முதலில் அவன் விரும்பி சாப்பிடுவதை ரசித்துக்கொண்டே ஆர்வத்தோடு சுட்டவள் அவன் சாப்பிட்டு கொண்டே இருக்கவும் கடுப்பானாள்..
“என்ன இப்படி சாப்பிடறான்???... இந்த அத்தை வேற மூனு தோசைக்கு மேல சாப்பிடமாட்டன் னு சொன்னாங்க.. மூனு தானு ஆரம்பிச்சா இப்ப முப்பது சாப்பிடுவான
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க ஊர் அய்யனார் தான்... அவரை பார்த்தாலெ பயம் தான் வருது..
இன்னொரு தரம் அவரைப்போய் என் முருகனோட கம்பேர் பண்ணாதிங்க... சிடுமூஞ்சி.. சிடுமூஞ்சி” என்று திட்டினாள்...
“இரு இரு என் பையன் சிடுமூஞ்சியா.... அப்படினா இன்னும் ரெண்டு நாள் அங்கயே இருக்க சொல்றேன்” என்று சிரித்தார் ஜானகி..