சாப்பிட்டு விட்டு மேல வந்தவன் இரவு உடைக்கு மாறி பின் தன் வேலைகளை முடித்து அப்பொழுது தான் மெத்தையில் படுத்தவன் கதவு தட்டும் சத்தம் கேட்கவும் எரிச்சலோடு எழுந்து வந்து
“என்ன?? “ என்று எரிந்து விழுந்தான்...
“அது ... வந்து... உங்க அம்மா.... பால்.... “ என்று உளறினாள் பாரதி...
“ஏய்.... உளறாமல் சொல்லு” என்று அதட்டலுக்கு அப்படியே நடுக்கம் ஆப் ஆகியது....
“உங்கம்மா இந்த பாலை கொடுக்க சொன்னாங்க “ என்று பாலை அவன் முன்னே நீட்டினாள்...
“ஏய்... என்னை என்ன சாப்பாட்டு ராமனு நினைச்சியா??? ... ஏற்கனவே நிறைய செஞ்சு போட்டு தொலைச்சிருக்க... இதுல பால் வேற யா.. வேண்டாம் போ “ என்று முறைத்தான்..
“ஹ்ம்ம்ம் என்னை கேட்டா???... உங்கம்மா தான் பால் குடிக்கலைனா நைட் என் பையன் தூங்க மாட்டானு என்னை அனு
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்ட்டு வரச்சொல்லுங்க” என்று எரிந்து விழுந்தான்..
“காலைல மீட்டிங்கனா ஈவ்னிங் கூட்டிட்டு போய்ட்டு வா கண்ணா... நம்ம வீட்டு வாரிசு.. நாமலும் கூட போனா தான் நம்ம மேல பாசமா இருக்கும்.. அதோடு குழந்தையோட வளர்ச்சி எப்படி இருக்குனு நாம் தெரிஞ்சுக்கலாம்... அதனால நீயே கூட்டிட்டு போய்ட்டு வந்திடு”