(Reading time: 15 - 30 minutes)

மறுநாள் விடியும் போதே ஒருவித பதட்டம் வெண்பாவை சூழ்ந்திருந்தது.அவளின் முகத்தை கண்டவன் உறுதியாய் அவளை தன்னுடன் வர வேண்டாம் என்று கூறிவிட்டான்.

மருத்துவ மனைக்குச் சென்று ஒரு மணி நேரத்தில் திரும்பியவனின் முகத்தை வைத்து ஒன்றையும் கணிக்க முடிவில்லை வெண்பாவால்.

அவன் நிதானமடைய நேரம் கொடுத்தவள் மெதுவாய்,”திவா எங்க ரிப்போர்ட்டை எதையும் காணும்?இன்னும் ரெடிஆகலையா?”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ம்ம்..இல்ல கண்ணம்மா எடூத்துட்டு வர மறந்துட்டேன்.என் ரூம்லயே விட்டுட்டு வந்துட்டேன்..”

“ஏன் என்னாச்சு திவா ரிப்போர்ட்ல என்ன வந்துருக்கு..?”

“கண்ணம்மா உன் சந்தேகம் சரிதான்..காம்ப்ளிகேஷன்ஸ் இருக்குடா  நமக்கு குழந்தை...”

சட்டென அவனருகில் அமர்ந்தவள் வெறித்து விழிக்க அவனே தொடர்ந்தான்.

“சாரி கண்ணம்மா..என்கிட்ட இப்படி ஒரு குறை இருக்கும்னு நினைக்கவே இல்ல..”

“திவா!!!!!”

“ஆமாடா ப்ராப்ளம் எனக்குதான்..ட்ரீட்மெண்ட் பார்க்கலாம் ஆனா எந்தளவு பாசிட்டிவ் ரிசல்ட் வரும்னு சொல்ல முடியாதுனு சொல்றாங்க..”,உணர்ச்சி துடைத்த முகமாய் தான் அனைத்தையும் கூறினான்.

அடுத்த நொடி அவன் காலருகில் மண்டியிட்டு அமர்ந்தவள் முககத்தை கைகளில் ஏந்திக் கொண்டாள்.

“திவா நா இருக்கேன் உனக்கு..நீ எதையும் போட்டு நினைச்சு கஷ்டப்படாத..ப்ளீஸ்..”

“கண்ணம்மா!!”,என்றவன் கண்கள் பனிக்க அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

.

தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:1221}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.