இந்த நிலையும் அந்த தானே புயலால் ஒரு வருடமாக வளர்ந்து வந்த வாழை மரங்கள் கடைசி நிலையில் வேரோடு சாய்ந்தன.. அதில் பலத்த அடி வாங்கியது விவசாயம்.. அதை சரி பண்ணி மீண்டும் விவசாயத்தை தொடர கையில் பணம் இல்லாததால் அவ்வளவு ஏக்கரிலும் பயிரிட முடியாமல் கொஞ்சமாக சுருங்கியது அவர்கள் விவசாயம்.. அதுவும் கடைசியில் நீர் இல்லாததால் வறண்டு போனது....
இந்த நிலையில் தான் பாரதி தன் குடும்ப நிலையை சமாளிக்க ஏதாவது வேலைக்கு செல்வது என்று முடிவு செய்தாள்.. அப்பொழுது திருச்சியில் ஒரு மருத்துவமனைக்கு ரிஷப்னிஷ்ட் வேலை இருப்பதாக தெரியவும் பாரதி சென்று டாக்டர் கமலாவை பார்த்தாள்..
முதலில் அவள் +2 தான் படித்திருக்கிறாள் என்று தயங்கியவர் பின் பாரதியின் கலகல பேச்சும் யாரிடமும் இயல்பாக பழகும் குணத்தையும் கண்டு அவளை ரிஷப்ஷ்னில் நியமித்தார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ையும் இல்லாத முகமும் அவள் நெற்றியில் அணிந்திருந்த திருநீறும் அவனுக்குள் எதையோ சாந்த படுத்தியது... அவளையே சிறிது நேரம் பார்த்தவன் பின் சமாளித்துக்கொண்டு
“என்ன?? நாம ஹாஷ்பிட்டலுக்கு தான போறோம். எதுக்கு இப்படி மினுக்கிக்கிட்டு நிக்கற?? .. என்ன என்னை மயக்கவா?? “ என்றான் அதே கடுப்போடு...