(Reading time: 28 - 55 minutes)

“என்ன நடக்குது டாக்டர் இங்க?? .. ஏதோ  டீவி சீரியல் பார்க்கற மாதிரி இருக்கு...ஆனா கதை தான் எனக்கு புரியல “ என்று சிரித்தாள்..

அவளின் சிரிப்பைக் கண்டு தன் நிலைக்கு வந்தவர் அப்பொழுதுதான் பாரதியை கவனித்தவர்

“ஹே!!  பாரதி... வா வா வா . .. என் பையனை சிரிச்சு பார்த்த சந்தோசத்துல உன்னை மறந்துட்டேன்... நீ எப்படி இருக்க” என்று அவளையும் கட்டிக்கொண்டார்...

“ஷ் அப்பாடா.. ஒரு வழியா நான் உங்க கண்ணுக்கு தெரிஞ்சனா.?? எங்க என்னை பார்த்து நீ யார் என்று கேட்டுடுவீங்களோனு நினைச்சேன்” என்று கன்னம் குழிய சிரித்தாள்...

அவளின் அந்த சிரிப்பையே இமைக்காமல் பார்த்தான் ஆதி சில விநாடிகள்.. இதுவரை அவன் முன்னே அவள் சிரித்ததில்லை என்று அப்பொழுதுதான் உறைத்தது அவனுக்கு.. அவனின் பார்வை அவளின் கன்னக்குழியில் சென்று மயங்கி

...
This story is now available on Chillzee KiMo.
...

>பின் எல்லாம் சரி பார்த்து

“எல்லாம் நல்லா இருக்கு.. ஒரு பிரச்சனையும் இல்லை” என்று சிரித்தார்..அப்பொழுது தான் பாரதி நிம்மதியானாள்.. அதுவரை கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு இருந்தவள் மெல்ல கண்ணை திறந்தாள்... அவள் முகம் தெளிவானது இப்பொழுது...மனதுக்குள் அந்த முருகனுக்கு நன்றி சொல்லிக்கொண்டாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.